முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்தது காட்டுத் தீ

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், ஜூன். - 9 - திருமங்கலம் நகர், ராஜீவ்காந்தி நகர் குடியிருப்பு பகுதியை சுற்றி வளைத்த காட்டூத்தீயை தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். ராஜீவ்காந்தி நகரின் பின்பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காட்டு பகுதியில் சிலர் காய்ந்த சருகுகளுக்கு தீ வைத்து விட்டு ஓடி விட்டனர். இதையடுத்து காற்றின் வேகத்தில் கொளுந்து விட்டு எரிந்த தீ மளமளவென பரவி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்தது. இதனால் அப்பகுதி மக்கள் திருமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மக்கள் வசித்த வீடுகள் சேதமின்றி தப்பின. இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்