முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் பாகிஸ்தானில் 14 பேர் பரிதாப பலி

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

குவெட்டா, ஜூன். - 9  -  பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலி யானார்கள். 50 -க்கு ம் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணம் , ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல் லை அருகே உள்ளது. ஆப்கானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவா ளர்கள் பலுசிஸ்தான் எல்லையில் அதிக மாக உள்ளனர்.  இவர்கள் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகி ன்றனர். இந்நிலையில் குவெட்டா மா காணத்தில் மதரசா பள்ளியில் நேற்று முன் தினம் பட்டமளிப்பு விழா நடந் தது.  இதற்காக மாணவர்களும் பெற்றோர் களும் மதரசாவில் குவிந்திருந்தனர். அப்போது மதரசாவிற்கு வெளியே சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த  வெடிகுண்டுகள் பயங்கரமாக வெடித்து சிதறின. இதில் 3 சிறுவர்கள் உள்பட 14 பேர் சம் பவ இடத்திலேயே பரிதாபமாக பலி யானார்கள். 50 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவம் குறித்து துணை ஐ.ஜி. காஸித்திடம் கேட்ட போது, மதரசா வை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்