முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டையில் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

புதுக்கோட்டை, ஜூன்.- 10 - முதல்வர் ஜெயலலிதா புதுக்கோட்டை தொகுதி புதுப்பட்டியில் அனைத்திந்திய அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டமானை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து விமானம் மூலமாக திருச்சி சென்று அங்கிருந்து கார் பயணமாக புதுக்கோட்டை பாலன் நகரை சென்றடைந்தார். அங்கு அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையில் இரு மருங்கிலும் ஆண்களும், பெண்களும், பெரியவர்கள் மற்றும் சிறுவர்களும் முதல்வர் ஜெயலலிதாவின் வருகையை எதிர்பார்த்து நீண்ட நேரமாக காத்திருந்தனர். அதேபோல் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வரையிலும் எல்லா ஊர்களிலும் ஜெயலலிதாவை காண மக்கள் வெள்ளம் போல் கூடியிருந்தனர். அவரை கண்டவுடன் புரட்சித் தலைவி வாழ்க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க என்று முழக்கமிட்டனர். புதுக்கோட்டை பாலன் நகரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த இளைஞர் அணி மகளிர் அணி எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் அ.தி.மு.க கொடிகளை கையில் ஏந்தி தமிழகத்தின்  நிரந்தர முதல்வர் புரட்சி தலைவி அம்மா வாழ்க தமிழகத்தின் தாய் வாழ்க பெண்குலத்தை வாழவைக்கும் அன்னை வாழ்க என்றெல்லாம் போற்றி புகழ்ந்து வாழ்த்தினர். வரவேற்பில் பொள்ளாச்சி ஜெயராமன், கே.கே.பாலசுப்பிரமணியம், வாலாஜாபாத் கணேசன் எம்.எல்.ஏ., கணிதாசம்பத் எம்.எல்.ஏ., வாலாஜாபாத் நகராட்சி தலைவர் வரதராஜலு சத்யா, தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். முதல்வர் ஜெயலலிதா பாலன் நகருக்கு வருகை தந்த போது  அவருக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் தலைமையில்  கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்