முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அரசு செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நெடுஞ்சாலைத்துறையின் சாலை மற்றும் பாலம் ஆகியவற்றின் நிலுவைப்பணிகள் குறித்த முன்னேற்றம் மற்றும் 2012-13-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தினை நேற்று நடத்தினார்.

இக்கூட்டத்தில் சென்ற ஆண்டில் சாலைப்பணிகள் குறித்த காலத்தில் செய்து முடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அமைச்சர் பாராட்டினார்.

அதேபோல் இவ்வருடமும் அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்கி சாலைகளை  தரமாக செப்பணிடுவதற்கும், கோட்டப் பொறியாளர்கள் அவர்களுடைய எல்லைக்குட்பட்ட சாலைகளை ஆய்வு செய்து பேட்ஜ் ஒர்க்கை உடனுக்குடன் செய்து மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும், சாலை மற்றும் பாலப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்தக்கூடாது என்றும், நீண்ட கால நிலுவையில் உள்ள நிலப்பிரச்சனையை அரசுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை சம்மந்தமான கோரிக்கையினை தெரிவிக்கும்போது அதன் விவரத்தை அமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், தரமான சாலைகளை அமைப்பதற்கும், பழுதடைந்துள்ள சாலைகளை உடனுக்குடன் சீர்செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்