எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.15 - தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களின் ஆய்வுக் கூட்டம் 14.6.2012 அன்று சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது: நடப்பாண்டில் கூட்டுறவின் மூலம் ரூ.4,000 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில் 7.6.2012 வரை ரூ.308.37 கோடி பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக் குறியீட்டை எய்திட ஏதுவாகவும், புதியவர்களுக்கு பயிர்க் கடன்களை வழங்கிடவும் திட்டமிட்டு பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அதாவது பால்பண்ணை அமைத்தல், பண்ணை ஆடுகள் வளர்ப்பு, வெண்பன்றி, முயல் வளர்ப்பு மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு நடப்பாண்டில் ரூ.300 கோடி அளவிற்கு கடன் வழங்கிட குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில், 31.5.2012 வரையில் ரூ.26.54 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வேளாண் பொருள்களின் மீது தானிய ஈட்டுக் கடன் பெற ஏதுவாக நடப்பாண்டில் ரூ.185 கோடி அளவிற்கு குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில், 31.5.2012 வரையில் ரூ.15.06 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்ய மைய வங்கியியல் கணினி சேவை முறை செயல்படுத்த தக்க நடவடிக்கைகளை உடன் எடுத்து விரைவாக பணியை முடித்திட வேண்டும்.
மேலும் சட்டமன்றப் பேரவையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்தபடி, புறநகர் பகுதிவாழ் மக்களுக்கு கூட்டுறவு கடன் கிடைக்கும்வகையில் 25.5.2012 அன்று, கோவை மாவட்டத்தில் வேலாண்டிபாளையம், கணபதி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவூர், கொளப்பாக்கம், அய்யப்பந்தாங்கல், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களாக செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் 78 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் 22 நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகள் நவீனமயமாக்கப்படும் என அறிவித்ததிற்கிணங்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் விரைந்து நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதேப்போன்று, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக 27 புதிய கிளைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெரும்பான்மையான மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பு கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும்.
அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, 41 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் வாழ்திறனை மேம்படுத்த தலா ரூ.50 இலட்சம் வீதம் மானிய வட்டி விகிதத்தில் சிறப்புக் காசுக் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து அதன் வாழ்திறனை உயர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நடப்பாண்டில் முறையே ரூ.2400 கோடி, ரூ.590 கோடி மற்றும் ரூ.950 கோடி வைப்புத்தொகையாக திரட்ட குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை எய்திட வங்கிகளின் தனி அலுவலர்களும், செயலர்களும் ஈடுபாட்டுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டனர்.
நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருட்டுப் போகாமல் பாதுகாக்க 50 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் 16 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கும் 52 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இரும்புப் பெட்டகங்கள் நிறுவுவதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கூட்டுறவு வங்கிகள் கடன்களை வழங்குவதுடன் மட்டுமன்றி, கொடுத்த கடன்களை கடன்தாரர்களிடமிருந்து தவணை காலத்திற்குள் வசூலித்து, சிறப்பாகச் செயல்பட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வணிக வங்கிகளுக்கு இணையாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 31.12.2012க்குள் அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் கணினிமயமாக்கும் பணி முடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும், கிடங்குகள் கட்டுதல், அச்சகங்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டில், பொது விநியோகத் திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றுவதில் கூட்டுறவுகளின் பங்கு மகத்தானது. எனினும், அரிசி நுகர்வு அதிகம் உள்ள கடைகளில் தீவிர ஆய்வு செய்து, அரிசி கடத்தலைத் தடுத்திடுமாறும், உண்மையான குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தின் போது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், சட்டப்ர்வ நிதிகளுக்கு ரூ.54.60 இலட்சத்திற்கான காசோலைகளை அமைச்சரிடம் வங்கியின் தனி அலுவலர் சா.கரிகாலன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அண்ணாமலை, மற்றும் கூடுதல் பதிவாளர்கள் க.பு.பெ.பன்னீர்செல்வன், அசோகன், அ.சங்கரலிங்கம், இரா.ராஜேந்திரன், கே.பாலசுப்பிரமணியம், எம்.ப்பி.சிவனருள், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.