முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாகப்பட்டினம் வெடிவிபத்தில் 10 பேர் பரிதாப பலி

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

விசாகப்பட்டினம், ஜுன்15 - விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு உருக்காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியானார்கள். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரீய இஸ்பாட் நிஹாம் என்ற உருக்காலையில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் அதே இடத்தில் பலியானார்கள். மேலும் 9 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் அகர்வால் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்த விபத்து  ஒரு கண்ட்ரோல் ரூமில் ஏற்பட்டதாகவும், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் பைப் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த உருக்காலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தீ அணைப்பு பகுதியினர் விரைந்து வந்து வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயை அணைத்தனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் ஆவார்கள். பலியானவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டதோடு, படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். இந்த வெடி விபத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த உருக்கு ஆலை 1971 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் ஆண்டுக்கு 63 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்