முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானைத்தந்தம் வைத்திருந்ததாக மோகன்லால் மீது வழக்கு

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

கொச்சி, ஜூன் 16 - பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீது யானைத்தந்தம் வைத்திருந்ததாக வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள பிரபல மலையாள நடிகர் சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டில் கடந்த 2010-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர்  சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில்  இருந்த யானைத்தந்தத்தை  அதிகாரிகள்  கைப்பற்றினர்.

இதைத்  தொடர்ந்து வன விலங்குகள் தடை  சட்டத்தின் கீழ் மோகன்லால் மீது வனத்துறை அதிகாரிகள்  எப்.ஐ. ஆர்.(முதல் தகவல் அறிக்கை) பதிவு  செய்திருந்தனர்.

இது  தொடர்பாக தாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும்  இந்த விசாரணை விரைவில் முடிந்து விடும் என்றும் கொச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில்  வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பி.என். கிருஷ்ணகுமார், என். கிருஷ்ணகுமார் என்ற பெயர்களை கொண்ட இவர்கள் இருவரும் இந்த யானைத்தந்தத்தை வைத்திருக்க வனத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளனர். இவர்கள் வெளிநாட்டுக்கு சென்றதை முன்னிட்டு  இவர்கள் இருவரும் இந்த  யானைத்தந்தத்தை  பாதுகாப்பு காரணம் கருதி  மோகன்லாலிடம்  கொடுத்துவிட்டு  சென்றதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்