முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே மிக உயரமான முருகன்சிலை திருச்செந்தூரில் அமைக்கப்படுகிறது

புதன்கிழமை, 20 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், ஜூன். - 20 - திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஸ்குமார் கூறியதாவது,  தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவையொட்டி திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே மலேசியாவில் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலின் மூலவர் சிலையை மாதிரியாக கொண்டு நாகர்கோவிலை சேர்ந்த சிற்பிகள் வடிவமைத்து தந்துள்ளனர். இந்த சிலை கற்சிலையாக அமைக்கப்படவுள்ளதா, அல்லது கான்கிரீட்டால் அமைக்கப்படவுள்ளதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த சிலை அமைப்பதற்கான செலவை சிருங்கேரி மடம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. சிலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு முடிவு செய்ததற்கு பிறகு செலவை முழுமையாக சிருங்கேரி ஏற்றுக் கொள்ளுமா? அல்லது மற்றவர்களோடு சேர்ந்து நிதியுதவி செய்வார்களா என்பது பின்னர் தெரியும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்