முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.19 லட்சம் வருமானம்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், ஜூன். 28 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் திருக்கோயிலில் ரூ. 19 லட்சம் உண்டியல் வருமானமாக கிடைத்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 25 நிரந்தர உண்டியல்களும், 2 கிரிவல உண்டியல்களும் உள்ளன. அதில் பக்தர்கள், பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகிறது. கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன், தலைமையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில் பக்தர்கள் வழங்கிய ரூ. 19 லட்சத்து 59 ஆயிரத்து 495 ம், தங்கம் 302 கிராமும், வெள்ளி 1,105 கிராமும் கோயிலுக்கு வருமானமாக கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்