முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் இருந்து விலக சர்தாரிக்கு இறுதிக்கெடு...!

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

லாகூர், ஜூன். 29 - வரும் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்தே விலக வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் லாகூர் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்தே விலக வேண்டும் என்று லாகூர் ஐகோர்ட் கடந்த 2011 ம் ஆண்டு மே மாதம் 12 ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் சர்தாரி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை. இந்த நிலையில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பதவியை சர்தாரி ராஜினாமா செய்யாதது குறித்து லாகூர் ஐகோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் லாகூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி உமர் உள்பட 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த அவர்கள் சர்தாரி வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் இருந்தே விலக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு செய்யத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே சர்தாரி மீதான ஊழல் வழக்கு விசாரணையை முடுக்கிவிடாமல் இருந்ததால் தான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்து அவர் பதவி பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்