முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யத்திரீக டென்டில் தீ விபத்து

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ஜம்மு, ஜூலை.1 - அமர்நாத் செல்லும் யாத்திரீகர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த டென்ட் ஒன்றில் நேற்று  தீடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் இமயமலை பகுதியில் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகை  கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம் இந்த ஆண்டும் இந்த யாத்திரை கடந்த மாதம் 25-ம் தேதி துவங்கியது. இந்த யாத்திரை வருகிற ஆகஸ்டு மாதம் 2 ம் தேதி முடிவடைகிறது.

இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

மேலும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணி அணியாக பல்வேறு வாகனங்களில் அமர்நாத்  புறப்பட்டு செல்கின்றனர்.

அமர்நாத்கோவில் அருகே பக்தர்கள் தங்குவதற்காக நூற்றுக்கணக்கான டென்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த டென்ட் ஒன்றில் நேற்று திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது.

எரிவாயு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருந்தாலும் இந்த டென்ட்டிற்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று மீண்டும் தீ பிடிக்காமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார்  தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்