முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப. தங்க வேலன் மீது மு.க. அழகிரி எரிச்சல்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஏப் 1 - ராமநாதபுரத்துக்கு வந்த மு.க. அழகிரியை மாவட்ட அமைச்சரான சுப. தங்க வேலன் வரவேற்க வராததால் ஆத்திரமடைந்த அழகிரி, ஸ்டாலின் வந்தால் தான் வரவேற்பு கொடுப்பாரா என்னை எல்லாம் வரவேற்க வரமாட்டாரா என்று எரிந்து விழுந்து திருவாடானை தொகுதிக்கு செல்லாமலே திரும்பி விட்டார்.

ராமநாதபுரத்துக்கு மு.க அழகிரி நேற்று வருகை தந்தார். அவரை நகர் எல்லையில் திமுக பிரமுகர்கள் வரவேற்றனர். ஆனால் மாவட்ட அமைச்சரான சுப. தங்க வேலனும் அவரது ஆதரவாளர்களும் நகர் எல்லைக்கு வரவில்லை. அவர்கள் அனைவரும் பாரதி நகரில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்திலேயே இருந்து விட்டனர்.

அவரை வரவேற்க அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் வராததால் ஆத்திரமடைந்த அழகிரி, சுப. தங்கவேலனின் ஆதரவாளர்களிடம் என்னை எல்லாம் வரவேற்க வரவில்லை உங்கள் மந்திரி.  ஸ்டாலின் வந்தால் தான் வரவேற்பாரா ? என்று எரிச்சலுடன் கூறிவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலி ஏற்பாடு செய்திருந்த ஊழியர் கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு விட்டு அமைச்சர் சுப. தங்க வேலன் போட்டியிடும் திருவாடானை தொகுதிக்கு சொல்லாமலேயே கோபத்துடன் மதுரை திரும்பி விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்