முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் - புதுகை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.1 - கட்சி விரோத நடவடிக்கையில்  ஈடுபட்டதால், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை நீக்கியுள்ளதாக கட்சியின்  பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

13.4.11 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில், கழக வேட்பாளரையும், கூட்டணிக் கட்சியின் வேட்பாளரையும் எதிர்த்து வேட்பு மனுதாக்கல் செய்து, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வி.ராஜபாண்டியன் (மாவட்ட மாணவர் அணித்தலைவர்) ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறர்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனக் கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்