முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி முதல்வரானால் மலைக்கோட்டையைகூட விற்று விடுவார்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஏப்.1 - 6-வது முறையாக கருணாநிதி தமிழக முதல்வராக் பதவி ஏற்றால் திருச்சி மலைக்கோட்டையைக்கூட விற்றுவிடுவார் என்று நடிகர் விஜயகாந்த் காட்டமாக பேசினார். 

அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் நடிகர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருச்சியில் நேற்று திருவெறும்nullர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் குமாரை அதரித்து திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பஸ் நிறுத்தத்தில் பிரசாரம் செய்தார். அப்போது நடிகர் விஜயகாந்த் பேசியதாவது:-

இந்த தொகுதியில் போட்டியிடும் திருவெறும்nullர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள். நம்முடைய நோக்கம் தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்பவதோடு, நமது கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்பதுதான். 

இந்த பகுதியில் பொதுமக்களின் nullநீண்டநாளைய பிரச்சினை சர்வீஸ் ரோடு பிரச்சனை உள்ளது. சர்வீஸ் ரோடு இருந்தால் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லமுடியும். ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகளால் சர்வீஸ் ரோடு திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த மாவட்டத்தில் நேரு என்ற மந்திரி உள்ளார். வரும் மே 13-க்கு பிறகு அந்த நேரு மந்திரியாக இருக்க மாட்டார். 5-வது தடவையாக முதல்வராக வந்த கருணாநிதி நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? இப்போது ஆறாவது முறையாக தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பேன் என்று கருணாநிதி கத்திக்கொண்டு இருக்கிறார். ஊருக்கு உழைக்க பிறந்ததாக கருணாநிதி கூறுகிறார். 6-வது முறையாக முதல்வராகி நாட்டை மேலும் கொள்ளையடிக்க கருணாநிதி திட்டமிடுகிறார். இனி அவர் முதல்வராக வரப்போவதில்லை. நாட்டை கொள்ளையடிக்கும் திட்டமும் நடக்காது. நீங்களும் அவரை நம்பி மோசம் போய்விட்டீர்கள். இனியும் கருணாநிதியை நம்பி ஓட்டுப்போடாதீர்கள் 

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் பணத்தை கருணாநிதி குடும்பத்தினர் கொள்ளையடித்து வைத்துள்ளார்கள். இந்த தொகைக்கு எத்தனை சைபர் என எனக்கே தெரியாது. எனவே ஆறாவது முறையும் கருணாநிதி முதல்வர் ஆகி விட்டால் திருச்சி மலைக்கோட்டையையும் வெட்டி விற்று விடுவார். 

கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அது குறித்து கருணாநிதி வாய்திறந்து எதாவது பேசியிருப்பாரா?

30 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இப்போது 63 ரூபாய்க்கு விற்கிறது. விரைவில் அது 150 ரூபாயாக உயரக்கூடும். 33 ரூபாய் கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் விலை கூடிவிட்டது. சம்சாரம் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டிவிஎஸ் மொபட்டில் போகும் சாதாரண மனிதன், இனி எப்படி மொபட்டில் போக முடியும். மின்வெட்டினால் கடந்த 5 ஆண்டுகளாக தொழில்கள் சரியாக நடத்த முடியவில்லை. அடிக்கடி கரன்ட் கட் ஆகி விடுகிறது. ஒரு நாளைக்கு 6 மணிநேரம் கரன்ட் கட்டாகி விடுகிறது. பதிலுக்கு நாமும் கருணாநிதியின் பவரை கட் செய்ய வேண்டும். 

இந்த பகுதியில் அமைச்சர் நேருவும், அவரது தம்பி ராமஜெயமும் கொள்ளையடித்து வருகின்றனர். அமைச்சர் நேரு கலர் கலராக பஸ்களை விட்டு பஸ் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிக்கின்றார். சொகுசு பஸ் விடுவதாக கூறும் நேரு கடைசியில் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில்தான் ஓடுகிறது என்கிறார். இதுகுறித்து நான் சட்டசபையில் பேசினேன். நேற்று(புதன்) லால்குடி தொகுதியில் நான் பிரச்சாரம் செய்தபோது வரும் வழியில் நேருவின் சொந்த தொகுதியில் 100 ஏக்கர் நிலத்தை வழைத்து போட்ட பகுதியை எனக்கு காண்பித்தார்கள். மொத்தம் 1000 ஏக்கர் நிலம் நேரு வாங்கி விட்டதாக எனக்கு சொன்னார்கள். நேருவுக்கும், அவரது தம்பி ராமஜெயத்துக்கும் எப்படி கோடி கோடியாக பணம் வந்தது. மண் வெட்டியை எடுத்து வியர்வை சிந்தி வெட்டி சம்பாதித்த பணமா அது? 

மு.க.ஸ்டாலின் தன்னுடைய வேட்பு மனுவில் சொந்தமாக கார் இல்லை என கூறி இருக்கிறார். ஆனால் அவரது மகன் உதயநிதி 7 சினிமா படங்கள் எடுக்க எப்படி பணம் வந்தது. இப்போதைய உடனடி தேவை கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதுதான். நான் அ.தி.மு.க. கூட்டணியில் சேரக்கூடாது என உளவு பிரிவு போலீஸை வைத்து சதி செய்தனர். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய கூட்டணியில் சேர்ந்தேன். 

உங்கள் ஊர் அமைச்சர் நேரு கடந்த 1986 வரை எப்படி இருந்தார். இப்போது எத்தனை கோடிகளை வைத்திருக்கிறார். மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டு மக்களுக்கு தனது சொத்துக்களை கொடுத்தார். அவரது பெயரை வைத்துள்ள இந்த நேரு வீட்டு மக்களுக்காக சொத்துக்களை சேர்த்துள்ளார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வரவிடக்கூடாது. தமிழகத்திற்கு ஆட்சி மாற்றம் தேவை அப்போதுதான் சர்வீஸ் ரோடு உள்பட அடிப்டை பிரச்சனைகளை தீர்க்க முடியும். இவ்வாறு நடிகர் விஜயகாந்த் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago