எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. ஏப்.1 - 6-வது முறையாக கருணாநிதி தமிழக முதல்வராக் பதவி ஏற்றால் திருச்சி மலைக்கோட்டையைக்கூட விற்றுவிடுவார் என்று நடிகர் விஜயகாந்த் காட்டமாக பேசினார்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் நடிகர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருச்சியில் நேற்று திருவெறும்nullர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் குமாரை அதரித்து திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பஸ் நிறுத்தத்தில் பிரசாரம் செய்தார். அப்போது நடிகர் விஜயகாந்த் பேசியதாவது:-
இந்த தொகுதியில் போட்டியிடும் திருவெறும்nullர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள். நம்முடைய நோக்கம் தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்பவதோடு, நமது கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்பதுதான்.
இந்த பகுதியில் பொதுமக்களின் nullநீண்டநாளைய பிரச்சினை சர்வீஸ் ரோடு பிரச்சனை உள்ளது. சர்வீஸ் ரோடு இருந்தால் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லமுடியும். ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகளால் சர்வீஸ் ரோடு திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த மாவட்டத்தில் நேரு என்ற மந்திரி உள்ளார். வரும் மே 13-க்கு பிறகு அந்த நேரு மந்திரியாக இருக்க மாட்டார். 5-வது தடவையாக முதல்வராக வந்த கருணாநிதி நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? இப்போது ஆறாவது முறையாக தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பேன் என்று கருணாநிதி கத்திக்கொண்டு இருக்கிறார். ஊருக்கு உழைக்க பிறந்ததாக கருணாநிதி கூறுகிறார். 6-வது முறையாக முதல்வராகி நாட்டை மேலும் கொள்ளையடிக்க கருணாநிதி திட்டமிடுகிறார். இனி அவர் முதல்வராக வரப்போவதில்லை. நாட்டை கொள்ளையடிக்கும் திட்டமும் நடக்காது. நீங்களும் அவரை நம்பி மோசம் போய்விட்டீர்கள். இனியும் கருணாநிதியை நம்பி ஓட்டுப்போடாதீர்கள்
ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் பணத்தை கருணாநிதி குடும்பத்தினர் கொள்ளையடித்து வைத்துள்ளார்கள். இந்த தொகைக்கு எத்தனை சைபர் என எனக்கே தெரியாது. எனவே ஆறாவது முறையும் கருணாநிதி முதல்வர் ஆகி விட்டால் திருச்சி மலைக்கோட்டையையும் வெட்டி விற்று விடுவார்.
கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அது குறித்து கருணாநிதி வாய்திறந்து எதாவது பேசியிருப்பாரா?
30 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இப்போது 63 ரூபாய்க்கு விற்கிறது. விரைவில் அது 150 ரூபாயாக உயரக்கூடும். 33 ரூபாய் கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் விலை கூடிவிட்டது. சம்சாரம் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டிவிஎஸ் மொபட்டில் போகும் சாதாரண மனிதன், இனி எப்படி மொபட்டில் போக முடியும். மின்வெட்டினால் கடந்த 5 ஆண்டுகளாக தொழில்கள் சரியாக நடத்த முடியவில்லை. அடிக்கடி கரன்ட் கட் ஆகி விடுகிறது. ஒரு நாளைக்கு 6 மணிநேரம் கரன்ட் கட்டாகி விடுகிறது. பதிலுக்கு நாமும் கருணாநிதியின் பவரை கட் செய்ய வேண்டும்.
இந்த பகுதியில் அமைச்சர் நேருவும், அவரது தம்பி ராமஜெயமும் கொள்ளையடித்து வருகின்றனர். அமைச்சர் நேரு கலர் கலராக பஸ்களை விட்டு பஸ் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிக்கின்றார். சொகுசு பஸ் விடுவதாக கூறும் நேரு கடைசியில் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில்தான் ஓடுகிறது என்கிறார். இதுகுறித்து நான் சட்டசபையில் பேசினேன். நேற்று(புதன்) லால்குடி தொகுதியில் நான் பிரச்சாரம் செய்தபோது வரும் வழியில் நேருவின் சொந்த தொகுதியில் 100 ஏக்கர் நிலத்தை வழைத்து போட்ட பகுதியை எனக்கு காண்பித்தார்கள். மொத்தம் 1000 ஏக்கர் நிலம் நேரு வாங்கி விட்டதாக எனக்கு சொன்னார்கள். நேருவுக்கும், அவரது தம்பி ராமஜெயத்துக்கும் எப்படி கோடி கோடியாக பணம் வந்தது. மண் வெட்டியை எடுத்து வியர்வை சிந்தி வெட்டி சம்பாதித்த பணமா அது?
மு.க.ஸ்டாலின் தன்னுடைய வேட்பு மனுவில் சொந்தமாக கார் இல்லை என கூறி இருக்கிறார். ஆனால் அவரது மகன் உதயநிதி 7 சினிமா படங்கள் எடுக்க எப்படி பணம் வந்தது. இப்போதைய உடனடி தேவை கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதுதான். நான் அ.தி.மு.க. கூட்டணியில் சேரக்கூடாது என உளவு பிரிவு போலீஸை வைத்து சதி செய்தனர். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய கூட்டணியில் சேர்ந்தேன்.
உங்கள் ஊர் அமைச்சர் நேரு கடந்த 1986 வரை எப்படி இருந்தார். இப்போது எத்தனை கோடிகளை வைத்திருக்கிறார். மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டு மக்களுக்கு தனது சொத்துக்களை கொடுத்தார். அவரது பெயரை வைத்துள்ள இந்த நேரு வீட்டு மக்களுக்காக சொத்துக்களை சேர்த்துள்ளார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வரவிடக்கூடாது. தமிழகத்திற்கு ஆட்சி மாற்றம் தேவை அப்போதுதான் சர்வீஸ் ரோடு உள்பட அடிப்டை பிரச்சனைகளை தீர்க்க முடியும். இவ்வாறு நடிகர் விஜயகாந்த் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.