எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.2 - தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைத்து உள்ள மாபெரும் கூட்டணிக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 164 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே, ஆஜ்தக் மற்றும் ஓ.ஆர்.ஜி. நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் தி.மு.க. கூட்டணிக்கு இத்தேர்தலில் 68 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் மேற்கண்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்த பிறகு கட்சித் தலைவர்கள் பிரச்சாரக் களத்தில் சுறுசுறுப்பாக இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கருத்துக் கணிப்புகள் எல்லாமே அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளன.
சமீபத்தில் கோவையில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு அ.தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது. அதற்குப் பிறகு ஆனந்த விகடன் இதழ் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டது. இந்த கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க. கூட்டணி 44.26 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தி.மு.க. கூட்டணி 34.60 சதவீத வாக்குகளை பெறும் என்றும் மற்ற கட்சிகள் 21.14 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களை சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து எடுக்கப்பட்ட சர்வே இது என்று அந்த இதழ் குறிப்பிட்டிருந்தது.
மேலும் அ.தி.மு.க. கூட்டணியே பலமான கூட்டணி என்றும் தி.மு.க. கூட்டணி பலவீனமான கூட்டணி என்றும் ஆனந்த விகடன் இதழ் கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் பல கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. 2011 சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுமே வெற்றி பெறுவார்கள் என்று பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதே போல அசாம் மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் என்றும் சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே, ஆஜ்தக் தொலைக்காட்சி மற்றும் ஓ.ஆர்.ஜி. நிறுவனமும் இணைந்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. இந்த கருத்துக் கணிப்பும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கே ஆதரவாக உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான மாபெரும் கூட்டணிக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 164 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இத்தேர்தல் மூலம் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இ.கம்யூனிஸ்டு, வ. கம்யூனிஸ்டு, தே.மு.தி.க, போன்ற பல கட்சிகளை உள்ளடக்கிய அ.தி.மு.க. கூட்டணிக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. அது மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணிக்கு மொத்தமே 68 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. 2006 ம் ஆண்டு தேர்தல் நடந்த போது அ.தி.மு.க. 69 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தி.மு.க. கூட்டணி 163 இடங்களை அப்போது கைப்பற்றியது. ஆனால் இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்தால் எல்லாம் தலைகீழாக மாறி விட்டது.
அ.தி.மு.க. கூட்டணிக்கு 164 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 68 இடங்களும்தான் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. காரணம், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு போன்றவற்றால் தி.மு.க.வின் செல்வாக்கு அடியோடு சரிந்து விட்டது என்பதுதான் உண்மை. ஸ்பெக்ட்ரம் ஊழலை அ.தி.மு.க மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைத்து வருகிறது. இந்த கொள்ளையர்களை வெளியேற்றுங்கள் என்று நேற்று கூட ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட போது அதை தி.மு.க. அரசு சரியான முறையில் கையாளவில்லை. இதனாலும் மக்கள் அந்த அரசு மீது வெறுத்துப் போயிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்டம், குடிநீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளும் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தி.மு.க. அரசு சரியான தீர்வு காணவில்லை. அதனால் ஜெயலலிதாவே அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். 36.1 சதவீத மக்கள் ஜெயலலிதாவை விரும்புகிறார்கள். ஆனால் கருணாநிதி முதல்வராக வேண்டும் என்று 34.1 சதவீத மக்களே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தன் மகன் ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி விரும்புகிறார். ஆனால் 3.5 சதவீத வாக்காளர்களே ஸ்டாலினை விரும்புகிறார்கள். ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இந்த தேர்தல் மூலம் தே.மு.தி.க.வுக்கு 11.3 சதவீத வாக்கு கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஒட்டுமொத்தமாக சொன்னால் ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு மூலம் அ.தி.மு.க. கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணிக்கு 50 சதவீத வாக்குகளும், தி.மு.க. கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்க நிலவரத்தையும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும், 182 சட்டப் பேரவை தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
ஆனால் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், இந்த கூட்டணி 101 தொகுதியில் வெற்றி பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 32 சதவீத வாக்குகளும், 46 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் கண பரிஷத் கட்சிக்கு 25 சதவீத வாக்குகளும், 38 தொகுதிகளும்தான் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு 12 சதவீத வாக்குகளும், 15 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 48 சதவீத வாக்குகளும், 96 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 40 சதவீத வாக்குகளும், 41 தொகுதிகளும்தான் கிடைக்கும் என்றும் மற்றர்களுக்கு 12 சதவீத வாக்குகளும், 3 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவதும், தி.மு.க. கூட்டணி வீட்டுக்கு செல்வதும் இந்த கருத்துக் கணிப்பு மூலம் உறுதியாகி விட்டது. மேலும் நேற்று சென்னையில் வெளியான லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக் கணிப்புகளும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ