எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.2 - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று (ஏப்.1) மதியம் சென்னையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வழியெங்கும் அவருக்கு பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி பார்வேர் பிளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உட்பட கூட்டணிக் கட்சிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 234 இடங்களில் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
கடந்த மாதம் 4-ந் ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரம் தொடங்கிய ஜெயலலிதா, நேற்று முன்தினம் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்தார். சென்னையில் நேற்று முதற்கட்டமாக அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று மதியம் ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக நுங்கம்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா புஷ்பாநகரில் பொதுமக்களிடையே பேசினார்.
பின்பு நெல்சன் மாணிக்கம் சாலை, சூளைமேடு, மேத்தாநகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, எம்.எம்.டி.ஏ. வழியாக வாக்கு சேகரித்த ஜெயலலிதா சூளைமேடு எம்.எம்.டி.ஏ. மார்க்கெட்டில் அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திராவிற்காக வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவருக்கு மகளிர் அணியினர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். பிறகு கோயம்பேடு, திருமங்கலம், நூறடி சாலை வழியாக அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வேதச்சாலத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன் பிறகு பாடி வழியாக வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். வில்லிவாக்கம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் கொடிகளையேந்தி ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்பு கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம் பகுதியில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா அயனாவரம் பஸ்நிலையம் அருகே கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அதன்பிறகு பொடிக்கடை நம்மாழ்வார்பேட்டை வழியாக ஓட்டேரி பாலம் அருகே ஜெயலலிதா வந்தபோது அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கையில் இரட்டை இலை சின்னத்தையும், கட்சிக்கொடியையும் உற்சாகமாக காண்பித்தனர். கூட்டணி கட்சியினரும் கொடியுடன் வந்து ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரட்டை இலைக்கே எங்கள் வாக்கு, அ.தி.மு.க. அமோக வெற்றிபெரும் என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர்.
அதன் பிறகு ஓட்டேரி பிரிட்ஜ்கேஸ் சாலை வழியாக ஓட்டேரி மேகலா தியேட்டர் அருகே எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு போயஸ் இல்லத்திற்கு திரும்பினார்.
இந்த பிரச்சாரத்தில் தலைமை நிலையச்செயலாளர் செங்கோட்டையன், அமைப்பு செயலாளர் மு.தம்பித்துரை, வடசென்னை மாவட்ட செயலாளரும், ராயபுரம் தொகுதி வேட்பாளருமான டி.ஜெயக்குமார், வேட்பாளர்கள் ஆயிரம் விளக்கு-வளர்மதி, அண்ணாநகர்-கோகுல இந்திரா, தி.நகர்-கலைராஜன், துரைமுகம்-பழக்கருப்பையா, சேப்பாக்கம்-அமிமுன்அன்சாரி, மைலாப்பூர்-ராஜலட்சுமி, திரு.வி.க.நகர்-நீலகண்டன், ஆர்.கே.நகர் வெற்றிவேல், திருவொற்றியூர் -குப்பன், வில்லிவாக்கம்-ஜே.சி.டி. பிரபாகரன், கொளத்தூர்-சைதை துரைச்சாமி, பெரம்பூர்-சி.பி.எம். வேட்பாளர் ஆ.செளந்தர்ராஜன் எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. கு.நல்லதம்பி, தென்சென்னை மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி வேட்பாளருமான செந்தமிழன், திருவள்ளூர்-ரமணா, மாதவரம்-மூர்த்தி, பொன்னேரி -ராஜா, அம்பத்தூர் - வேதாச்சலம், பூந்தமல்லி-மணிமாறன், திருத்தணி-தே.மு.தி.க.-சுப்பிரமணியன், கும்மிடிப்பூண்டி-சேகர், மதுரவாயல்- சிபிஎம் வேட்பாளர் பீம்ராவ் உட்பட ஏராளமான முன்னணி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பிரச்சாரம் ஆரம்பித்த நுங்கம்பாக்கம் சாலையில் இருந்து பிரச்சாரத்தை முடித்த எழும்பூர் தொகுதி பிரிக்கிளின் சாலை வரை வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள், பெண்கள், இளம் தலைமுறையினர் வழிநெடுக நின்று ஜெயலலிதாவை பார்த்து இரட்டை விரலை காட்டி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அனைத்து இடங்களிலும் மகளிர் அணியினர், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை அமைப்பினர், கூட்டணி கட்சி தொண்டர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரச்சார பகுதியில் பொதுமக்களிடையே இந்த முறை கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டே தீரவேண்டும் என்று பேசிக்கொண்டனர்.
நேற்று காலை வெளியான லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற செய்திபற்றி பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாகமாக பேசிக்கொண்டனர். ஓட்டேரி பகுதியில் அப்பளத்தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன், பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவியுடன் 4 கிராம் தங்கம், மாணவர்களுக்கு லேப் டாப், விலைவாசி உயர்வை தனது அரசு வந்தால் கட்டுப்படுத்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்து சென்னை மாநகரை ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பேன் என்று ஜெயலலிதா பேசியது பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பையும், கரகோசத்தையும் பெற்றுத்தந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.