முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுஜுண்டாலை 31-ம் தேதிவரை மும்பைபோலீஸ் காவலில் வைக்கஉத்தரவு

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூலை.- 22 - மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான  அபு ஜுண்டாலை இம்மாதம் 31 ம் தேதி வரை  மும்பை போலீஸ் காவலில் வைக்க கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி போலீசார்  அபு ஜுண்டால் என்ற ஒரு  தீவிரவாதியை டெல்லியில்  கைது செய்தனர். கைது  செய்யப்பட்ட அவனிடம் விசாரணை நடத்தியதில் பல முக்கிய  தகவல்கள் சிக்கின. கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி மும்பையில் நடந்த  தாக்குதலில் ஈடுபட்ட 10 பாகிஸ்தான்  தீவிரவாதிகளை மூளையாக இருந்து  இயக்கியது  இவன்தான் என்பது  தெரிய  வந்தது.  மும்பை  தாக்குதல் மட்டுமல்லாமல் மேலும் பல பயங்கர  தாக்குதல்  சம்பவங்களிலும்  இவனுக்கு  தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. டெல்லியில்  கைது செய்யப்பட்ட அபு ஜுண்டாலை  தங்களது காவலில் வைத்து  விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று  டெல்லி மெட்ரோபாலிடன்  முதன்மை மாஜிஸ்திரேட்டு  கோர்ட்டில்  மும்பை தீவிரவாத  அதிரடிப்படை போலீசார் மனு செய்திருந்தனர்.  இந்த மனு மீது விசாரணை நடத்திய  நீதிபதி  வினோத் யாதவ்  அபு ஜுண்டாலை மும்பை போலீசாரிடம் ஒப்படைக்க  நீதிபதி  வினோத் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி  அபு ஜுண்டால மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். நேற்று காலை விமானம் மூலம் அபு  ஜுண்டாலை மும்பை  போலீசார்  மும்பைக்கு  கொண்டு வந்தனர். மும்பை விமான நிலையத்திலிருந்து  அபு ஜுண்டால் பலத்த பாதுகாப்புடன்  ரகசியமான பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு  அழைத்து  செல்லப்ட்டான். பிறகு மும்பையில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் கோர்ட்டில்  அபு ஜுண்டால் ஆஜர்படுத்தப்பட்டான்.  அவனை தங்களது  காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி தீவிரவாத தடுப்பு  அதிரடிப்படை போலீசார் கேட்டுக்கொண்டனர்.  அதன்படி  அபு ஜுண்டாலை  வருகிற 31-ம்  தேதி வரை மும்பை போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு  உத்தரவிட்டார். இதனை  தொடர்ந்து அபு ஜுண்டாலை மும்பை தீவிரவாத தடுப்பு போலீசார் தங்கள் காவலில் எடுத்துக்கொண்டனர்.
மும்பை  தாக்குதல் சம்பவம் மட்டுமல்லாமல் புனே ஜெர்மன் போக்கரி குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளிலும்  அவனுக்குள்ள தொடர்பு  குறித்து தீவிரவாத தடுப்பு போலீசார் அவனிடம் துருவி துருவி விசாரணை நடத்துவார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்