எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஏப். 3 - மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 28 ஆண்டுக்குப் பின் 2 -வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்தப் போட்டி ரசிகர்களின் ஆர்வத்தை தணிக்கும் வகையில் விறுவி றுப்பாகவும், பரபரப்பாகவும் அமைந்தது. இரு அணி வீரர்களும் இறு திப் போட்டிக்கு ஏற்றவாறு மிகுந்த சிரத்தையுடன் ஆடினர்.
இந்திய அணி சார்பில், கெளதம் காம்பீர், விராட் கோக்லி, கேப்டன் தோனி ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தே டித் தந்தனர். பெளலிங்கின் போது, ஜாஹிர்கான், யுவராஜ் சிங் மற்று ம் ஹர்பஜன் சிங் ஆகியோர் நன்கு பந்து வீசினர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிச் சுற்று ப் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் நேற்று பக லிரவு ஆட்டமாக நடந்தது. இதில் முன்னதாக டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி சார்பில், உபுல் தரங்கா மற்றும் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இலங்கை அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட் ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 274 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், 3 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் நன்றாக இருந்தது. கடைசி 10 ஓவர் வரை இலங்கை அணியின் ரன் ரேட் 5 - க்குள்ளாகவே இருந்தது.
இறுதிக் கட்டத்தில் ஜெயவர்த்தனே, குலசேகரா மற்றும் பெரீரா ஆகி யோர் நன்கு ஆடியதால் அந்த அணி 270 ரன்னைத் தாண்டி கெளரவ மான ஸ்கோரை எட்டியது. ரன் ரேட்டும் 5 -க்கு மேல் உயர்ந்தது.
இலங்கை அணியின் இன்னிங்சில் ஜெயவர்த்தனே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 88 பந்தில் 103 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரி அடக்கம்.
அவருடன் இணைந்து ஆடிய கேப்டன் சங்கக்கரா 67 பந்தில் 48 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் யுவராஜ் சிங் வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தவிர, தில்ஷான் 87 பந்தில் 33 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். சமரவீரா 34 பந்தில் 21 ரன்னை எடுத்தார். குலசேகரா 30 பந் தில் 32 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்க ம். பெரீரா 9 பந்தில் 22 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.
இந்திய அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர் கான் 60 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பகுதி நேரப் பந்து வீச்சாளரான யுவராஜ் சிங் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, ஹர்பஜன் சிங் 50 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார்.
இந்திய அணி 273 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 277 ரன்னை எடுத்தது.
இந்திய அணி சார்பில் சேவாக் மற்றும் டெண்டுல்கர் இருவரும் ஆட்ட த்தை துவக்கினர். ஆனால் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச் சி காத்திருந்தது. அணி கணக்கைத் துவக்குவதற்கு முன்பாகவே சே வாக் ஆட்டம் இழந்தார்.
இலங்கை வீரர் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 2 -வது பந்தில் சேவாக் எல்.பி.டபிள்யு.வாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து காம்பீர் களம் இறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை படிப்ப டியாக உயர்த்தினர்.
அடுத்த சிறிது நேரத்தில் மற்றும் ஒரு அதிர்ச்சி இந்திய அணிக்கு காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 31 -க்கு உயர்ந்த போது, 6.1 - வது ஓவரில் டெண்டுல்கர் 18 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
மலிங்கா வீசிய பந்தில் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் கொடுத்து சச்சி ன் ஆட்டம் இழந்தார். இது இந்திய அணிக்கு பேரிடியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கோக்லி, காம்பீருடன் இணைந்தார். இந்த ஜோடி கவனமாக ஆடி அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்திய து. அணியை சரிவில் இருந்து மீட்டது.
ஒரு முனையில் காம்பீர் நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் கோக்லி தனக்கே உரிய பாணியில் ஆடினார். இருவரும் விக்கெட்டை பாதுகாத்தவாறு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அணியின் ஸ்கோர் 114 -க்கு உயர்ந்தபோது, ஒரு முனையில் காம்பீரு க்கு பக்கபலமாக ஆடிய கோக்லி, தில்ஷான் வீசிய பந்தில் அவரிட மே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கோக்லி 49 பந்தில் 35 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இந்த ஜோடி 3 -வது விக்கெட்டிற்கு 83 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தவிர, காம்பீர் மற்றும் கோக்லி ஜோடி நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
கோக்லி ஆட்டம் இழந்ததும், கேப்டன் தோனி களம் இறங்கினார். அவர் காம்பீருடன் இணைந்து ஆடினார். இந்த ஜோடி கவனமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் ஸ்கோரும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது.
இதற்கிடையே காம்பீர் சதத்தை நோக்கி முன்னேறினார். அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 3 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவ விட்டார்.
இந்திய அணியின் ஸ்கோர் 223 ரன்னிற்கு சென்ற போது, காம்பீர் பெரீ ரா வீசிய பந்தில் கிளீன் போல்டானார். அவர் 122 பந்தில் 97 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். காம்பீர் மற்றும் தோனி ஜோ டி இணைந்து 4 -வது விக்கெட்டிற்கு 109 ரன்னைச் சேர்த்தது. முன்னதாக அவர் 56 பந்தில் 50 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக் கம்.
காம்பீர் ஆட்டம் இழந்ததும், அவருக்குப் பதிலாக அதிரடி வீரர் யுவ ராஜ் சிங் களம் இறங்கினார். ஒரு முனையில் கேப்டன் தோனி நிலை த்து ஆட, மறு முனையில் யுவராஜ் தனது கணக்கைத் துவக்கினார்.
இதற்கிடையே கேப்டன் தோனி 52 பந்தில் 50 ரன்னை தொட்டார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இது ஒரு நாள் போட்டியில் தோனியின் 38 -வது அரை சதம் என்பது நினைவு கூறத்தக்கது. கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடரில் இதுவரை சரியாக ஆடவில்லை.
ஆனால் முக்கியமான இந்தப் போட்டியில் பொறுப்புடன் ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் அவசரப்பட்டு ஆடாமல் விக்கெட்டை பாதுகாத்தவாறு ஆடினார்.
இந்திய அணி 10.6 ஓவரில் 50 ரன்னை எட்டியது. 19.3 ஓவரில் 100 ரன் னை எட்டியது. 29.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. பின்பு 37.5 ஓவ ரில் 200 ரன்னை எட்டியது. 46.2 ஓவரில் 250 ரன்னை எட்டியது.
இந்திய அணி இறுதியில் 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 277 ரன் னை எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டி யில் அபார வெற்றி பெற்றது. கடைசியில் இந்திய அணியின் வெற்றி ஷாட்டை சிக்சர் மூலம் கேப்டன் தோனி அடித்தார்.
இந்திய அணி வெற்றி பெற்றதும், இந்திய அணி வீரர்கள் சாதனை நா யகனான சச்சினை தோளில் சுமந்தவாறு மைதானத்தை வலம் வந்தனர். ரசிகர்கள் இதனைக் கண்டு கைதட்டி அவரையும், இந்திய வீரர்களையும் உற்சாகப்படுத்தினர்.
இந்திய அணி வெற்றி பெற்றதும், நாடு முழுவதிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகி ர்ந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.