இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

நெல்லை ஏப்-3 - மதுரை மேலூரில் தாசில்தார் மீது அழகிரி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று நெல்லை டவுன் வாகையடி முனையில் நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பழனி, ராதாபுரம் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், நாங்குநேரி தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் தேர்தல். அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற்று தரும் தேர்தல். தி.மு.க. ஆட்சியில் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி எந்தநடவடிக்கையும் எடுத்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. இந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை 9 முறை உயர்ந்துள்ளது. ரூ.15 ஆக இருந்த அரிசி விலை ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. ரூ.13 ஆக இருந்த சர்க்கரை விலை ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. ரூ.28 ஆக இருந்த துவரம் பருப்பு விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.35ஆக இருந்த புளி ரூ110 ஆக உயர்ந்துள்ளது. ரூ.35 ஆக இருந்த பூண்டு விலை 250 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரூ.2500க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் தற்போது ரூ.280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்ட செங்கல் தற்போது ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது. மின் மிகுதியாக இருந்த தமிழகம் மின்வெட்டு மாநிலமாக மாறியுள்ளது. இதனால் ஜவுளி,நெசவு,விவசாயம் போன்ற தொழில்கள் நலிவடைந்து போனது. தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் ஆட்சியல்ல ரவுடி கும்பலின் ஆட்சி நடைபெறுகிறது. காவல்துறை கருணாநிதியின் ஏவல்துறையாக மாறிவிட்டது.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் கருணாநிதியின் தாரக மந்திரம். ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் டி.வி. உள்ளிட்ட பல்வேறு தொழில்களை கருணாநிதியின் குடும்பத்தினர் துவக்கியுள்ளனர். மக்கள் பணத்தை சுருட்டி தம் மக்கள் வாழ வகை செய்தவர் கருணாநிதி. அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. திருவாரூரிலிருந்து திருட்டு ரயில் ஏறிவந்த கருணாநிதி 5 முறை முதல்வராகியுள்ளார். இதன்மூலம் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். உலக பணக்காரர்களின் பட்டியலில் தம் குடும்ப உறுப்பினர்கள் முதலிடம் பெறவேண்டும் என்பதே கருணாநிதியின் ஆசை. திரைப்படத்துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை கருணாநிதியின் குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டனர். மதுரை மாவட்டம் மேலூரில் தேர்தல் பணியிலிருந்த தாசில்தார் அழகிரியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தற்போது நடைபெற்று கொண்டிருப்பது மக்கள் ஆட்சியல்ல ஒரு குடும்ப ஆட்சி. இந்த தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்தி கருணாநிதியின் குடும்பத்தை அப்புறபடுத்த வேண்டும். இந்த மாவட்டத்திலுள்ள தொகுதிகளின் பிரச்சனைகளை நான் நன்கறிவேன்.
இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆசியோடு அ.தி.மு.க. ஆட்சியமைந்தால் நெல்லை தொகுதிக்குட்பட்ட மானூர் புதிய தாலுகாவாக மாற்றப்படும். அங்கு பத்திரபதிவுத்துறை அலுவலகமும் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கான பணி நிரவல் முறை திருத்தி அமைக்கப்படும். பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், ஆகிய தொகுதிகளின் பிரச்சனைகளும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிறிஸ்தவர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட வக்புபோர்டு சொத்துக்கள் மீட்கப்படும். இஸ்லாமிய திருமணம் குறித்த கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலனை செய்யப்படும். மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். ரூ.1லட்சத்து 80 ஆயிரம் செலவில் நவீன பசுமை வீடுகள் அமைத்து தரப்படும். ஆதரவற்றோர், ஊனமுற்றோருக்கான உதவித்தொகை ரூ.1000 மாக உயர்த்தப்படும். கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை ரூ.2500 ஆக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருட்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும். சுய உதவி குழுக்களுக்கு 25 சதவிகித மானியத்தில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும். 58 வயது நிறைந்த முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். சூரிய ஒளி மூலம் மின் வசதி செய்து தரப்படும். நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். சாலைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும். நெசவாளர்கள், விவசாயிகள்,மீனவர்களின் பாதுகாப்புகள் உறுதிசெய்யப்படும். உழவர் பாதுகாப்புத்திட்டம் புதிய பொலிவுடன் செயல்படுத்தப்படும். ரவுடிகளால் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். எனவே குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 5 days 4 min ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் சுகாதார அமைச்சர் பலி : வெறிச்செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை
29 Jan 2023புவனேஸ்வர் : ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்ச
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு
29 Jan 2023நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
-
யு-19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை
29 Jan 2023ஜொகனர்ஸ்பெர்க் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் நாளை துவங்குகிறது : வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி
29 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்செய்யும் பணி நாளை தொடங்குகிறது.
-
ஆஸ்திரேலிய ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன்
29 Jan 2023சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
29 Jan 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
29 Jan 2023பெர்த் : ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.