முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு...!

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.24 - ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என இந்திய பேட்மின்டன் சங்கம் அறிவித்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27-ம் தேதி துவங்கவுள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 16 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவிலிருந்து 13 விளையாட்டுக்களில் தொடர்புடைய மொத்தம் 81 வீரர்கள், வீராங்கணைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்திய அணி சார்பில் சாய்னா நெஹ்வால், ஜூவாலாகட்டா, டிஜூ, காஷாயப், அஸ்வினி பொன்னப்பா உட்பட மொத்தம் 5 பேர் கலந்து கொள்ள உள்ளனர். சாய்னாநெஹ்வால் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் இந்திய வீரர் அல்லது வீராங்கணைகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய பேட்மிண்டன் சங்கம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. 

இது குறித்து அந்த வாரிய தலைவர் அகிலேஷ்தாஸ் குப்தா கூறும் போது ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.50 லட்சமும், வெங்கலம் வென்றால் ரூ.25லட்சமும் பரிசு வழங்கப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்