முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகனுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம்: மோகன்பாபு

வியாழக்கிழமை, 26 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

நகரி, ஜூலை. 26 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி ஐதராபாத்தில் உள்ள செஞ்சல்கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே ஜெயிலில் தொழில் அதிபர் நிம்மகட்ட பிரசாத்தும் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி தொழிலதிபர் நிம்மகட்ட பிரசாத் ஆகியோரை நடிகர் மோகன்பாபு, அவரது மகனும் நடிகருமான விஷ்ணு ஆகியோர் சந்தித்தனர். பின்னர் வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்த மோகன்பாபு கூறியதாவது, 

மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலெட்சுமி எனது சகோதரி. எனவே ஜெகன்மோகன் ரெட்டிக்கு நான் தாய் மாமன் என்ற முறையில் அவரை சிறையில் என் மகனுடன் சென்று சந்தித்தேன். தொழிலதிபர் நிம்மகட்ட பிரசாத் எனது நண்பர். எனவே அவரையும் சந்தித்தேன். தற்போதைய அரசியல் மகாபாரத யுத்தத்தை நினைவுபடுத்துகிறது. டெல்லியில் சில சகுனிகள் உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டிக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. மகாபாரத சகுனியால் யாருக்கு நல்லது நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இங்கும் அதுதான் நடக்கப் போகிறது. 

சிரடி சாய்பாபாவின் ஆசியால் ஜெகன்மோகன் ரெட்டியும், நிம்மகட்ட பிரசாத்தும் விரைவில் வெளியே வருவார்கள். இருவரையும் சந்தித்த பிறகு இதயம் பாரமாகி விட்டது. மிகுந்த வேதனையுடன் திரும்பி வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்