முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் ஒலிம்பிக் போட்டி: கல்மாடிக்கு கோர்ட் தடை

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 27 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான ஊழல் புகாரில் சிக்கியுள்ள கல்மாடி, ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்லக் கூடாது என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.கே. சிக்ரி மற்றும் நீதிபதி ராஜூவ் சகாய் ஆகியோரடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. தேசிய நலன்தான் முக்கியம் என்று கூறியுள்ள நீதிபதிகள் லண்டன் ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி கலந்து கொண்டால் இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளனர். எனவே ஒலிம்பிக் துவக்க விழாவில் கல்மாடி கலந்து கொள்ளக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் வரும் 27 ம் தேதி வரை நாட்டை விட்டு வெளியேறவும் கூடாது என்று கல்மாடிக்கு தடை விதித்துள்ளனர். எனினும் ஒலிம்பிக் போட்டி தொடர்பான தடகள சங்கத்தின் கூட்டத்திற்கு கல்மாடியை அழைப்பது குறித்து நீதிமன்ற உத்தரவை படித்துப் பார்த்த பின்னர் அந்த சங்கம்தான் முடிவு செய்யும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்