முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலியார் காலனியில் ஏ.கே.போஸ் வாக்கு சேகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப்.3 - அண்ணாபஸ்நிலையம் முதலியார் காலனி பகுதிகளில் அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கே.போஸ் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டார். மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்து வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக அண்ணாபஸ் நிலையம் மற்றும் முதலியார் காலனி பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்றும், வீடு வீடாக சென்றும் வாக்காளர்களை நேரில் சந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, ஜோதி, பி.புஷ்பா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. மகளிரணியைச் சேர்ந்த பெண்கள் கும்பத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.  

வேட்பாளர் ஏ.கே.போசுடன் எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மதுரை வடக்கு பகுதி கழகச் செயலாளர்கள் கே.ஜெயவேல், அண்ணாநகர் எம்.என்.முருகன், மாநகர் மாவட்ட பேரவை முன்னாள் இணைச் செயலாளர் எம்.என்.கோவிந்தராஜன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் பரமேஸ்வரன், கவுன்சிலர் பார்த்திபன், முன்னாள் வட்டக் கழக செயலாளர்  விஸ்வலிங்கம்,  தொகுதி கழக செயலாளர் எம்.ரவிச்சந்திரன், இணைச் செயலாளர்கள் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணி, செல்லூர் எம்.எஸ்.சுப்பு, வட்டச் செயலாளர்கள் மானகிரி மூர்த்தி, ஏ.முத்துச்சாமி, எஸ்.போஸ், புதூர் கே.எம்.கண்ணன், மாநகர் மாவட்ட பேரவை துணைத் தலைவர் புதூர் ஐ.அபுதாஹிர், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஏ.சுந்தரா, மகளிரணி எம்.கல்யாணி, பாப்பா லோகநாதன், டி.ஜெயபாக்கியம், தெய்வம் கணபதி, கெளசல்யா, உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்