முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தணி முருகன் கோயில் காணிக்கை 51 லட்சம்

சனிக்கிழமை, 28 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருத்தணி, ஜூலை.28 - திருத்தணி முருகன் கோயிலில் இம்மாதம் உண்டியல் காணிக்கை ரூ.51 லட்சமாகியுள்ளது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இம்மாதம் உண்டியல் காணிக்கை பலத்த பாதுகாப்புடன் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு திருக்கோயிலின் தக்கார்  வி.ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) கவிதா முன்னிலையில் கோயில் ஊழியர்களால்  எண்ணப்பட்டன. ரகவாரியாக ரூபாய் நோட்டுகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

இம்மாதம் உண்டியல் காணிக்கை ரூ.51 லட்சத்து 40 ஆயிரமும், 500 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆகும். திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் காணிக்கை சென்ற மாத காணிக்கையைவிட அதிகம் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்