முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் சுப.தங்கவேலன் வாக்கு சேகரிக்க கடும் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவாடானை,ஏப்.3 - திருவாடானை சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் சுப.தங்கவேலன் வாக்கு சேகரிக்க சென்ற போது பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் திருவாடானை ஒன்றியம், ஓரிக்கோட்டை, சாந்திபுரம், டி.நாகனி, நெய்வயல், அல்லிக்கோட்டை, நீர்க்குன்றம், நாச்சியேந்தல் போன்ற 20 -க்கும் அதிகமான கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது ஓரிக்கோட்டைக்கு வாக்கு சேகரிக்க சென்ற போது பெண்கள் கூட்டமாக நின்று தங்கள் கிராமத்திற்கு ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்துச்சாலை சரியில்லாமல் நிறுத்தப்பட்டது. இதை பல முறை அமைச்சராக இருந்த போது கூறியும் கண்டுகொள்ளவில்லை இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அமைச்சர் சுப.தங்கவேலன் வாக்கு சேகரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காந்திபுரம், நெய்வயல், அல்லிக்கோட்டை சென்ற இடங்கள் அனைத்திலும் பஸ் நிறுத்தப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் இதுவரை பஸ் இயக்கப்படவில்லை இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அமைச்சரிடம் வாக்கு வாததில் ஈடுபட்டனர் ரோடு சரிசெய்யப்பட்டவுடன் மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சமாளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்