முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவியேற்ற பின் ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு

சனிக்கிழமை, 28 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. 28 - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று சந்தித்து பேசினார். நேற்று மதியம் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மன்மோகன்சிங் அங்கு அவரை சந்தித்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த புதன்கிழமையன்று அவர் நாட்டின் 13 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற பிறகு அவரை பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஜனாதிபதியை துணை ஜனாதிபதி அன்சாரி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பல்வேறு மாநில கவர்னர்கள், லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்