எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.3 - சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தகராறுகள் ஆரம்பித்து தொகுதி தகராறுகள் வரை தி.மு.க. கூட்டணியினரின் குதிரைகள் நொண்டிக்கொண்டே ஓடுகிறது. காங்கிரஸ் குதிரை கோஷ்டி சண்டை என்னும் இரும்பு குண்டை கட்டிக்கொண்டு ஓடுகிறது.
எந்த தொகுதியிலும் தி.மு.க.வினர் காங்கிரசார் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்வதில்லை தி.மு.க.விலும் காங்கிரசிலும் மக்களை சந்திக்கும் கவர்ச்சிகர தலைவர்கள் இல்லை. கருணாநிதிக்கு கூட்டம் குறைவாக கூடுகிறது. வி.ஐ.பி. விஜயகாந்தின் அனல்பறக்கும் பிரச்சாரத்தை தாங்க முடியாதவர்கள் காமெடி நடிகர் வடிவேலுவை அழைத்து வந்து காமெடி பண்ணுகிற நிலையை காணமுடிகிறது.
இந்நிலையில் கருத்துக்கணிப்புகள் மக்கள் எண்ணங்கள் தமது கூட்டணிக்கு எதிராக இருப்பதால் மிரண்டுபோன தி.மு.க.வினர் தனது குடும்ப தொலைக்காட்சியிலும், தாத்தா தொலைக்காட்சியிலும் சித்து வேல செய்து மக்களை குழப்பும் வேலையினை ஆரம்பித்துள்ளனர்.
கொல்றாங்களே, கொல்றாங்களே என்று டப்பிங் வாய்ஸ் கொடுத்த குடும்ப தொலைக்காட்சியின் வியாதி தாத்தா தொலைக்காட்சிக்கும் வந்து விட்டது. விஜயகாந்தின் பிரச்சார தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாமல் மைக் கீழே விழுந்தமைக்காக தோளில் தட்டி தனது உதவியாளரை எடுக்கச் சொன்ன விஜயகாந்தின் அத்தகைய காட்சியை அருகருகே ஒட்டவைத்து திரும்ப அந்த நபரை விஜயகாந்த் அடிப்பதுபோல் காண்பித்து அதற்கு டப்பிங் சவுண்டும் கொடுத்து ஒளிபரப்பினர் அடிப்பட்டவரை வேட்பாளர் என்றனர். ஆனால் அந்த காட்சியில் வருபவருக்கு தலையில் முடி கிடையாது. தர்மபுரி வேட்பாளர் தலையெல்லாம் முடி உள்ளவர்.
இதேபோல் தான் பேசும்போது முகத்தை மறைக்கும் கொடியை விஜயகாந்த் இறக்க சொல்லும் காட்சியை காட்டி அ.தி.மு.க. கொடியையும் காட்டி சிண்டு முடியும் வேலையில் இரண்டு தொலைக்காட்சிகளும் இறங்கி உள்ளன.
இதன் உச்சகட்டமாக ஜெயலலிதா கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்கள் கண்டு கொல்ளாத ஜெயலலிதா என்று தாத்தா தொலைக்காட்சி திரும்ப திரும்ப நேற்று ஒளிபரப்பியது.
அதில் ஜெயலலிதா பேசும் கூட்டத்தில் பெண்கள் அதிகம் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சரிந்து விழுகின்றனர் போலீசார் அவர்களை தூக்கி விடுகின்றனர். இதை வைத்து பெண்கள் மயங்கினர். ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை என்றும் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் ஒளிபரப்புகின்றனர்.
இந்த பொய் செய்தி ஒளிபரப்பான போது பழைய ஞாபகங்கள் வந்தது. தி.மு.க.வினர் ஏதோ மனசாட்சி உள்ளவர்கள் போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவர்களுடைய மனசாட்சி சாம்பிளுக்கு சில விஷயங்கள் கடந்த ஆண்டு சுகாதார துறை மந்திரி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புகின்றனர். வழியில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடக்கிறார். அவரை பார்த்து வண்டியை நிறுத்திய அமைச்சர் மற்றும் உடன் சென்ற அதிகாரிகளும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். உயிருக்கு போராடிய எஸ்.ஐ. தண்ணீர் கேட்டபோது தண்ணீர்கூட கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி அமைச்சர் நின்றார். வெட்டுபட்டவரை உடனடியாக தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றி உடனே சிகிச்சை அளித்திருந்தால் ஒரு காவல் அதிகாரியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம், ஆனால் மனசாட்சி உள்ள தி.மு.க. அமைச்சர் அல்லவா? அதனால் அதிகாரி சாவதை வேடிக்கை பார்த்தபடி நின்றார். இந்த காட்சியை பார்த்து உலகமே வேதனைபட்டது.
இதேபோல் அமைச்சர் மைதீன் கான் கார் ஒரு பாதசாரி மீது மோதிவிட்டு விபத்தில் சிக்கியவவை காப்பாற்ற கூட முயற்சிக்காமல் தப்பி ஓடிவிட்டது. இதெல்லாம் தி.மு.க.வினரின் மனசாட்சிக்கு சில சான்றுகள் சொந்த காட்சியின் அமைச்சரையே கொன்றதாக அழகிரி மேல் குற்றசாட்டு கூறப்பட்டது.
சில பெண்கள் மயங்கி விழுந்ததை ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லையாம் அவருக்கு மனசாட்சி இல்லையாம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி வள்ளலார் போல் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர். 539 தமிழக மீனவர்களை துள்ள துடிக்க சண்டைக்காய் நாடு இலங்கை ராணுவத்தினர் கொன்றபோது கடிதம் எழுதுகிறேன் என்று பாவ்லா காட்டியவர். அப்பொழுது கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா? 539 தமிழக மீனவ பெண்கள் விதவை ஆனதை வேடிக்கை பார்த்தது மனசாட்சி உள்ள செயலா?
ஜெயலலிதா தி.மு.க. கட்சியினரையும், அரவணைத்து உதவியவர் கருணாநிதி சொந்த கட்சிக்காரனுக்கு கூட உதவாதவர். தி.முக.. விசுவாசியாக இருந்த எஸ்.எஸ்.சந்திரன் தனது சிகிச்சைக்கு பணமின்றி தவித்தபோது கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தபோது உரிய சிகிச்சை அளித்து உதவியதால் அ.தி.மு.க.வில் இணைந்த எஸ்.எஸ்.சந்திரன் கடைசிவரை அந்த நன்றியை மறக்காமல் இருந்தார். இதேபோல் தி.மு.க. மேடை பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் இக்கட்டான குடும்ப பிரச்சனை கராணமாக கருணாநிதியிடம் உதவி கேட்க நானே கஷ்டப்படுகிறேன். இதில் உனக்கு எங்கு நான் பணம் தர என்று கூறியதாக கூறப்பட்டது. பின்பு ஜெயலலிதாவிடம் தீப்பொறி ஆறுமுகம் உதவி கேட்டபோது வேண்டிய பணத்தை கொடுத்து புது கார் ஒன்றையும் ஜெயலலிதா தீப்பொறி ஆறுமுகத்திற்கு கொடுத்தார். இதுபோல் பல விஷயங்கள் சொல்லலாம். பண வசதி இல்லாமல் கருணாநிதியால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த அவரது மகன் மு.க.முத்து உதவி கேட்டுபோனபோது அவருக்கு ரூ.5 லட்சம் உதவி செய்தவர் ஜெயலலிதா.
குடும்ப தொலைக்காட்சிக்கும், தாத்தா தொலைக்காட்சிக்கும் தோல்வி பயம் வந்துவிட்டதால் பொய்யான விஷயங்களை உண்மையாக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள். என்ன ஜகஜ்ஜால வேலை செய்தாலும் பிரச்சினைகள் தான் மக்களை சிந்திக்க வைக்கும். அதுதான் இந்த ஆட்சிக்கு முடிவுரையும் எழுதும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.