முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் - பா.ஜ.க. கட்சிகளால் வருங்காலம் இல்லை..!

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. ஜூலை . 29  - டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில்  ஊழலுக்கு  எதிராக அன்னா குழுவினர்  காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இநத உண்ணாவிரத மேடைக்கு  சமூக  சேவகர்  அன்னா ஹசாரே நேற்று வந்தார். அப்போது அங்கே  செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார்.

இந்தியாவுக்கு  காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகளால்  வருங்காலம் என்பது இல்லை என்று  அவர்  கூறினார்.

தான்  அரசியல் கட்சியை  ஆரம்பிக்க போவதுமில்லை  அதே போல  தேர்தலிலும்  தான் போட்டியிடப்போவதுமில்லை என்றும்   அவர்  திட்டவட்டமாக கூறினார்.

மத்திய  அரசு  நம்மை ஏமாற்றுகிறது. காங்கிரஸ்  ஆண்டாலும் சரி  பா.ஜ.க. ஆண்டாலும் சரி  நாட்டிற்கு எதிர்காலம் என்பது  கிடையாது . இநத இரு கட்சிகளிலும்  எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர்  கூறினார்.

அன்னா குழுவினர்  தேர்தலில் போட்டியிட துடிக்கிறார்கள் என்று  காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவரும்  காங்கிரஸ் கட்சியின்  பொதுச்செயலாளருமான  திக் விஜய்  கூறியிருந்தார்.  இதற்கு பதில் அளிக்கும் முகமாகவே  அன்னா ஹசாரே இந்த கருத்தை  தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக அன்னா குழுவினர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப்போராட்டம்  நேற்று 4 வது நாளை எட்டியுள்ளது. 

நான்கு  நாட்களுக்குள்  தங்களது கோரிக்கைகளுக்கு  மத்திய  அரசு  தீர்வு காணாவிட்டால்  இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில்  தானும்  குதிக்க இருப்பதாக  ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

ஆனால் இது வரை  ஹசாரே குழுவினரின்  கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எனவே  ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொள்வாரா என்பது இன்று தெரிந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்