முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குத்துச்சண்டை போட்டியில் இந்தியவீரர் விஜேந்தர்சிங் முதல்சுற்றில் வெற்றி

திங்கட்கிழமை, 30 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஜூலை. - 30 - லண்டன் ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா சார்பில் சீனாவில் வெண்கலப் பதக்கம் பெற்ற விஜேந்தர்சிங் உட்பட 8 வீரர்களும் மேரிகோம் என்ற ஒரே ஒரு வீராங்கனையும் கலந்து கொண்டனர். 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜேந்தர்சிங் தொடக்க சுற்றில் கஜகஸ்தானை சேர்ந்த தானாபீன், சுகோனாவை எதிர்கொண்டார். இதில் ஆரம்பம் முதலே விஜேந்தர்சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 14 - 10 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விஜேந்தர்சிங் அமெரிக்காவை சேர்ந்த டெரல்கவுசாவை எதிர்கொள்கிறார். இந்த போட்டி ஆகஸ்ட் 2 ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக பாந்தம் வெயிட் பிரிவில்(56 கிலோ) இந்திய வீரர் ஜிவதாயி தொடக்க சுற்றில் 9 - 14 என்ற புள்ளிக் கணக்கில் மெக்சிகோ வீரர் ஆஸ்கரிடம் தோற்றார். லைட்வெயிட் பிரிவில் பங்கேற்கும் இந்திய வீரர் ஜெய்பகவான் நேற்றைய தொடக்க சுற்றில் செசல்ஸ் வீரர் ஆண்ட்ரிக்கை எதிர்கொண்டார். இந்திய நேரப்படி நேற்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்