முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைஜனாதிபதி தேர்தல்:அ.தி.மு.க ஆதரிக்கும்: ஜஸ்வந்த்சிங்

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. - 31 - துணை ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகள் தம்மை ஆதரிக்கும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,  ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ. சங்மாவை அ.தி.மு.க.வும் பிஜு ஜனதா தளமும் ஆதரித்தன. அதே கட்சிகள் என்னையும் ஆதரிக்கும் என நம்புகிறேன். தற்போதைய மத்திய அரசின் முடிவெடுக்கும் நடைமுறை சர்வாதிகாரத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. நாங்கள் ஆட்சி நடத்திய போது ஆலோசனை நடத்தித்தான் எந்த முடிவையும் எடுத்து வந்தோம். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்பிக்க முடியாது. நான் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டத்தை ஊடகங்களில் நேரலையாகக் காட்டுவதற்கு முயற்சி மேற்கொள்வேன். ஒரு சமத்தன்மையைக் காண வேண்டிய அவசியம் உள்ளது. துணை ஜனாதிபதி என்பவர் எம்.பி.க்களின் தலைவரோ அல்லது கண்காணிப்பாளரோ அல்ல. நாடாளுமன்றம் என்பது பிரசாரத்துக்கான இடமல்ல. நாடாளுமன்றத்தின் அடிப்படைப் பணி சட்டமியற்றுதல் மட்டும்தான் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்