முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி இந்தியவீரர் கஷ்யப் வெற்றி

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஆக. - 1 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் கஷ்யப் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றார்.  மகளிருக்கான பேட்மிண்டன் இரட்டை யர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவி ன் ஜுவாலா கட்டா மற்றும் அஸ்வினி ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக் கு முன்னேறியது.  குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த ஜோடி முதல் சுற்றில் ஜப்பான் அணியிடம் தோற்று இருந்தது. இதன் 2-வது சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்தது.  இதில் இந்தியாவின் ஜுவாலா கட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோ டியும், சீன தைபேயைச் சேர்ந்த இணை யும் மோதின.  இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ஜுவா லா மற்றும் அஸ்வினி ஜோடி நன்கு ஆடி, 25- 23, 18 -21, 21 -18 என்ற கணக் கில் வெற்றி பெற்றது.  ஜூவாலா - அஸ்வினி ஜோடி கடைசி ஆட்டத்தில் சிங்கப்பூர் இணையுடன் மோத இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் கால் இறுதிக்கு முன்னேறும்.  ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2-வ து சுற்றில் இந்திய வீரர் கஷ்யப், வியட்நாம் வீரரை தோற்கடித்து அடுத்த சுற்று க்கு தகுதி பெற்றார்.  இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரரான கஷ்யப் வெகு நேர்த்தியாக ஆடி புள்ளிகளைப் பெற்றார். இறுதியி ல் அவர் 21 - 9 , 21- 14, என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்