முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்தியானந்தா- ரஞ்சிதா பாஸ்போர்ட்கள் முடக்கம்?

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 3 - நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட 30 பேரின் பாஸ்போர்ட்களை டெல்லி விமான நிலையம் முடக்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள் ஏராளமாக உள்ளன. அதே போல ரஞ்சிதா மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தது போன்ற காட்சி வெளியானது முதலே இருவரும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

நித்தியானந்தாவுடனேயே ரஞ்சிதா தொடர்ந்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து லெனின் கருப்பன் உள்ளிட்ட பல பேர் மீது வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில் நித்தியானந்தா, ரஞ்சிதா உள்ளிட்ட 30 பேரின் பாஸ்போர்ட்களை டெல்லி சர்வதேச விமான நிலையம் முடக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோர்ட் உத்தரவின் பேரில் இவை முடக்கப்பட்டுள்ளதா அல்லது உளவுத் துறை உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை. இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடி விடாத வகையில் பாஸ்போர்டகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நித்தியானந்தா விவகாரத்தில் இந்த பாஸ்போர்ட் முடக்கம் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. தற்போது கயிலாயத்திற்குப் பயணமாகியுள்ளார் நித்தியானந்தா என்று தெரிகிறது. ஆனால் அவருக்கு பெங்களூர் மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை செய்ய அவருக்கு சம்மன் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கயிலாயத்திற்கு கிளம்பி சென்றுள்ளார். இதனால் கர்நாடக சி.ஐ.டி போலீஸார் கடும் கோபத்தில் உள்ளனராம். இதனால் அவர்கள்தான் மத்திய அரசை அணுகி, பாஸ்போர்ட்களை முடக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

கயிலாயம் போன நித்தியானந்தா, அப்படியே ரஞ்சிதா உள்ளிட்டோருடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடலாம் என்று தகவல் கிடைத்து அதன் பேரில் பாஸ்போர்ட்களை முடக்க கர்நாடக காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்