முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க செல்கிறார் அமைச்சர் சிவபதி

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.3 - தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி ஒரு வாரம் லண்டனில் தங்கி ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கப் போகிறார். லண்டனுக்குப் போய் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்து விட்டு வருமாறு முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் சிவபதிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் லண்டன் செல்கிறார் சிவபதி என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி ஒலிம்பிக் போட்டியை காண்பதற்காக பள்ளிக் கல்வி விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி வியாழக்கிழமை லண்டன் செல்கிறார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் ஒலிம்பிக் தடகளப் போட்டிகளைக் காண அவர் செல்கிறார். லண்டனில் ஒரு வாரம் தங்கியிருந்து அனைத்துப் போட்டிகளையும் காண உள்ளதாக அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்