முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்புமணிக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட் ஜாமீன்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. - 6 - தகுதியற்ற தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி உட்பட 9 பேருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனு நீதிபதி தல்வந்த்சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களை கேட்ட சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி, விசாரணையின் போது ஆஜரான குற்றம் சாட்டப்பட்டவர்களை சி.பி.ஐ. கைது செய்யவில்லை. விசாரணைக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். எனவே 9 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது. அனைவரும் ரூ. ஒரு லட்சம் பிணை தொகையையும் அதை அளவிலான உத்தரவாதத்தையும் தர வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்