முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசரப்பட்டு விட்டார் ஹசாரே சமூகசேவகர் மேதாபட்கர்கருத்து

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. ஆக. - 6 - அரசியலில் குதிக்க போவதாக அன்னா ஹசாரே அவசரப்பட்டு  முடிவெடுத்து விட்டார் என்று சமூக சேவகர் மேதா பட்கார் கருத்து தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் மகாராஷ்டிர மாநிலத்தை  சேரந்த சமூக சேவகர் அன்னா ஹசாரே தனது குழு வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்றும்  தாங்கள் அரசியல் கட்சியை துவக்க இருப்பதாகவும் அண்மையில அறிவித்திருந்தார். ஹசாரேவின் இந்த முடிவுக்கு  ஆதரவும் எதிர்ப்பும்  கலந்து வந்து கொண்டிருக்கின்றன.  இந்த நிலையில் இன்னொரு சமீக சேவகரான மேத்தா பட்கர்  இது தொடர்பாக  தனது கருத்தை தெரிவித்துள்ளார். அரசியலில் குதிக்க போவதாக அன்னா ஹசாரே கூறியிருக்கிறார். இது ஒரு அவசரமான முடிவு என்றும்  என்றாலும்  அவரது முடிவை தான் வரேற்பதாகவும் நர்மதா   பச்சாவ் அந்தோலன் இயக்கத்தின் தலைவரும் சமூக சேவகியுமான மேதா பட்கார்  கூறியுள்ளார். அதிகமான மக்களை சந்தித்து  அவர்களின் கருத்துக்களை பெற்ற பிறகு  அன்னா ஹசாரே  இன்னும் சிறிது காலம் கழித்து  இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு இயக்கத்திலும் இப்படிப்பட் முடிவு  எடுப்பது சகஜம்தான் என்றாலும்  இப்போதைக்கு  அவர் இந்த முடிவை எடுத்திருக்க கூடாது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்