முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 24 மணி நேரம் மழை நீடிக்கும்...!

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.9 - தமிழ்நாட்டில் 24 மணி நேரம் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் சென்னை முழுவதும் மழை பெய்தது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்திருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். இதேநேரத்தில் சென்னையில் நேற்று முன்தினத்தில் இருந்து புறநகர் பகுதியில் திடீரென்று மழை பெய்தது.நேற்றும் வட சென்னை மற்றும் தென் சென்னையில் பல  இடஙளில் விட்டு விட்டு மழை பெய்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்