முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான்கள் தாக்குதலில்ஆப்கானில் 8 பேர் பலி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

காபூல், ஆக.9 - ஆப்கான் தலைநகர் காபூலில் மினி பஸ் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.  கடந்த 2 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான தாக்குதல்களை தலிபான்கள் நடத்தியுள்ளனர். துப்பாக்கியால் சுடுவது, சாலைகளில் வெடிகுண்டுகள் வைப்பது உள்ளிட்டவை மூலம் தலிபான்கள் தாக்குதல் நடத்துகின்றனர். வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்து மினி பஸ் மீது தாக்குதல் நடத்தினர். வெடி குண்டு வைத்தவரை உள்ளூர் மக்களின் உதவியோடு போலீசார் பிடித்து விட்டதாக காபூல் காவல் துறை தலைவர் அயூப் சாலன்கி தெரிவித்துள்ளார். 

2011 ம் ஆண்டு 3,021 பேர் இது போன்ற தாக்குதலில் உயிரிழந்ததாக சாலன்கி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்