எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்போரூர்,ஆகஸ்ட்-9 - தொண்ட மண்டலத்தின் மண் திருமுருகன் புகழ்பாடும் திருநீறு என்றெல்லாம் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இத்தகைய மண்டலத்தில் எல்லாம்வல்ல திருப்போரூர் முருகன் என அழைக்கப்படுகிற கந்தசாமி பெருமான் ஞானக்கடவுளாக முத்தமிழ் வேந்தனாக பக்தர்களை காத்து அருள்புரிந்து வருகின்றார்.
சென்னை மாநகரிலிருந்து 76 கிமீ தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 27 கிமீ தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும், அருள்மிகு கந்தசாமி கோயில் கொண்ட திருப்போரூர் நகரம் அமைந்துள்ளது.
தற்சமயம் திருமுருகன் புகழ்பாடும் திருப்போரூர் மண்ணை முந்தைய வரலாற்று காலத்தில் அப்போது சோழர் மன்னர்களாலும் பல்லவ மன்னர்களாலும் திருப்பணி தொண்டுகளால் முருகனை சிறப்புறச் செய்தனர். இரண்டாம் நரசிம்ம பல்லவன் (கி.பி.691) கால கல்வெட்டு இக்கோயிலின் மண்டபத்தூண்கள் இரண்டில் காணப்படுகிறது. முதலாம் குலோத்துங்கன் சோழ காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் நாட்டு (கிபி 1076) இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டம் குமிழி நாட்டு திருப்போரியூர் சுப்பிரமணிய தேவர் என்பதை அன்னை தெய்வயானை சன்னதிக்கு அருகில் உள்ள சுவரில் காணப்படுகிறது.
கந்தபுராணத்தில் சூரபத்மன் வம்சத்தை அழிக்க அன்னை பராசக்தி அருளிய வேலாயுதத்துடன் முருக பெருமான் போர் தொடுத்தார். முருகபெருமான் தனது படைவீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மண்ணில் நின்று அசுரர்களின் அகர எண்ணத்தையும் திருச்செந்தூர் கடல்நீரில் நின்று சூரபத்மனையும் அவனது மாயை உருவத்தையும் திருப்போரூரில் விண்ணில் பறந்தபடி தாரகா சூரனையும் அவனது ஆணவத்தையும் அழித்தார்.
முந்தைய தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் இருந்த நவாப் மன்னர்கள் கந்த கடவுளுக்கு சிறப்புமிகு கோயிலை அமைக்க வேண்டும் என எண்ணினார்கள். அச்சமயத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலைகள் கோயில் கட்டும் எண்ணத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.
இருந்த போதிலும் நவாப் மன்னர்களின் எண்ணத்தை செயல்படுத்த காரணகர்த்தாவாக இருந்தவர் ஆதிகுரு ஸ்ரீமத் சிதம்பரசுவாமி. ஸ்ரீமத் சிதம்பரசுவாமி இறைவழிபாட்டில் திளைத்து தியானம் செய்யும் போது அவரது கண்முன் முருக பெருமானின் வாகனமாகிய மயில் பறந்துச் செல்வது போலத் தெரிந்தது. திடீரென்று மயில்வாகனம் தோன்றி மறைந்ததால் சிதம்பரசுவாமி அதன் விவரத்தை குருபிரானிடம் சொல்லி தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டார்.
முருகபெருமானின் சூட்சமத்தை தெரிந்துக் கொண்ட குருபிரான் நீ மதுரை சென்று மீனாட்சி அம்மனை வேண்டி தவம் செய். அப்போது உனக்கு தெளிவான பதில் கிடைக்கும். அதன்படி நீ தெய்வீக பணிகளை செய் என்றார்.
குருபிரானின் கட்டளையின்படி சிதம்பரசுவாமி மதுரைக்குச் சென்று அங்குள்ள மீனாட்சி அம்மனை நெஞ்சுருக வேண்டினார். 48 நாட்கள் ஊண் உறக்கம் இன்றி கடும் தவம் செய்தார். இருந்தபோதிலும் மீனாட்சிதேவியின்கருணை பார்வை விழவில்லை. பின்பு அவளது புகழை கசிந்துருகி நாவினிக்க பாடினார்.
சிதம்பரசுவாமியின் உண்மையான பக்தியைக் கண்டு வியந்த மீனாட்சி அம்மன் அவரின் கண்முன் தோன்றினார். உனது ஆழ்ந்த பக்தியை மெச்சினேன். வடக்கு திசையில் புராண வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற யுத்தபுரி என்றும் அங்கு வாழ்கின்ற மக்களால் திருப்போரூர் எனச் சொல்லப்படுகிற இடத்தில் எமது மைந்தன் முருகனுக்கு திருக்கோயில் அமைத்து வழிபடு எனச் சொல்லி மறைந்தார்.
அன்னை மீனாட்சியின் அருட்கட்டளையின் படி சிதம்ரபசுவாமி மதுரையில் இருந்து வடக்கு திசையில் உள்ள புத்தபுரி என்ற இடத்துக்கு வந்தார். யுத்தபுரி என்ற இடம் அடர்ந்த செடி, கொடிகளும் பனை மரங்களும் சூழ்ந்து இருந்தது. பல பகுதிகளில் முருகனுக்கு கோயில் அமைக்க உரிய இடம் கிடைக்காமல் தேடி அலைந்து சிதம்பரசுவாமி சோர்ந்து போனார் நிரந்தரமான இடத்தில் இருக்கவும் தம்மை தேடி அலைகின்ற தொண்டருக்கு அருள்பாலிக்க எண்ணிய முருகபெருமான் அடர்ந்த பனை மரங்களுக்கு இடையே ஒரு பனை மரத்தின் கீழ் சுயம்பு உருவில் புற்று மண்ணால் மூடிய நிலையில் காட்சி அளித்தார்.
சூரியனைக்கண்ட பனி போல தமது தேடலுக்கு வழி காட்டிய முருகபெருமானை சிதம்பரசுவாமி போற்றி வணங்கினார். அதன்பின்பு சுயம்பு வடிவில் தோன்றிய முருகபெருமானை எடுத்து வந்து வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகளை செய்து வழிப்பட்டார். தனக்கு கோயில் அமைக்காமல் வெறும் வழிபாடு மட்டும் செய்து வந்த சிதம்பர சுவாமிக்கு நினைவூட்ட திடீரென்று ஒரு நாள்
சிதம்பர சுவாமியின் கனவில் வந்த முருகன் சுவாமியின் நெற்றியில் விபூதியை பூசி விட்டு மறைந்தார்.
அந்த நொடிப்பொழிதில் இருந்து தமக்கு எத்தகைய வடிவத்தில் திருக்கோயில் அமைக்கப்பட வேண்டும் என்பதை தத்ரூபமாக சிதம்பரசுவமிக்கு முருகன் எடுத்துக்காட்டினார். தன்னை நாடி வருகின்ற பக்தர்களின் குறைகளை தீர்த்த காரணத்தினால் சிதம்பர சுவாமி அவர்கள் நன்கொடையாக பணத்தை வாரி வழங்கினார்கள்.
பக்கத்து பகுதிகளில் கொள்ளை அடிக்க கொள்ளையர் கூட்டத்தினர் அவ்வழியே வந்தனர். சுவாமியிடம் கோயில் கட்டுவதற்கு நிறைய பணம் வைத்து இருப்பதை உணர்ந்த அவர்கள் சிதம்பர சுவாமியை மிரட்டி பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
கொள்ளையர்களால் திருப்பணிக்காக சேமித்து இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை எண்ணி முருகபெருமானிடம் சிதம்பர சுவாமி அழுது புலம்பினார். அழுது புலம்பிய சிதம்பர சுவாமிக்காக முருகன் கொள்ளையர்களின் பார்வையை பறித்தார். தங்களது கண்பார்வை பறிபோனதற்கு சுவாமியின் பணத்தை கொள்ளை அடித்ததால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கொள்ளையர்களுக்கு முருகன் உணர வைத்தார். தங்களது செயலுக்கு மன்னிக்கும்படியும் எடுத்துச் சென்ற பணத்தை மீண்டும் ஒப்படைப்பதாக சொல்லி சிதம்பரசுவாமியின் காலில் விழுந்தனர்.
பின்பு அவர்கள் கொள்ளை அடித்த பணத்துடன் தமது சொந்த பணத்தையும் சேர்த்து வழங்கிவிட்டு சென்றனர். தமது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்ட கொள்ளையர்களுக்கு கண் பார்வை கிடைக்க சிதம்பர சுவாமி அருளினார். அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நோய்நொடிகளுக்கெல்லாம் முருகபெருமானின் திருநீற்றை வழங்கி அவர்களை சிதம்பர சுவாமி திருப்போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்படையாக சூழ்ந்து இருந்தனர். தமது நன்றிக்கடனாக அம்மக்கள் சுவாமிக்கு நன்கொடையாக பணத்தையும் பொருள்களையும் வாரி வழங்கினார்கள். இதனால் அவர்களது நன்கொடை பொருள்கள் மலை போல குவிந்தன.
எல்லாம்வல்ல முருகபெருமானின் அருளால் சிதம்பரசுவாமி குருவருளால் தீராத வயிற்றுவலி நீரில் தோன்றி மறையும் நீர்குமிழி போல காணாமல் போனது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நவாப் மன்னர் முருகன் கோயிலின் வளர்ச்சிக்காக சுமார் 650 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார். தானமாக பெற்ற அந்த நிலத்தில் சுவாமி திருக்கோயில் கட்டும் பணியை செய்து முடித்தார். சிதம்பர சுவாமி முழு முயற்சியால் சுமார் 17 ம் நூற்றாண்டுகளுக்கு பிற்பட்ட காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் என்றே சொல்லவேண்டும். சுவாமிகள் திருக்கோயில் மடத்திலேயே தங்கி பூஜை முருகனுக்கு செய்து அழகு பார்த்தார்.
திருப்போரூர் சந்நிதி முறை தலைப்பில் சிதம்பர சுவாமி 762 பாடல்களை முருகன் மீது பாடியுள்ளார். இதனை பிற்காலத்தில் பக்தர்களால் முருக கடவுளை வழிபடும் போது பாடி வருகின்றனர். அருட்பிரகாச வள்ளலார் பாம்மபன் சுவாமிகள் சந்தானலிங்க சுவாமிகள் அருணகிரிநாதர் போன்ற ஆன்மீக சான்றோர்களால் திருமுருகனை வழிபாடு செய்து பாடப்பட்ட திருத்தலம்.
முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் இங்கு கணநாதனாக திருக்கோயிலுக்கு நுழையும் முன்புற பகுதியிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். அவரை வணங்கிய பின்பே கந்த கடவுளை வணங்க ராஜகோபுரம் வழியாக கருவறைக்கு செல்லவேண்டும். கணநாதர் சந்நிதியை சற்று தள்ளி ஆதிகுரு சிதம்பர சுவாமி சந்நிதி உள்ளது. ராஜகோபுரம் நுழைவதற்கு முன்பு பெரிய வட்ட வடிவிலான மண்டபம் உள்ளது. இங்கு கொடி மரம் மயில் வாகனம் பலிபீடம் போன்றவை உள்ளது.
தமிழகத்தில் உள்ள முருகன் சந்நிதிகளில் இல்லாத சிறப்பாக வட்ட வடிவ மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பலிபீடத்தின் முன்புறம் தமது பிரார்த்தனையில் ஒன்றாக உப்பு மினகு ஆகியவற்றை பக்தர்கள் கந்த பெருமானுக்கு காணிக்கை செலுத்தி நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
வட்டவடிவ மண்டபத்தைக் கடந்து ராஜகோபுரம் 24 கால் மண்டபம் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறத்தில் முருகனின் மனைவியர்களில் ஒருவரான தெய்வயானை சந்நிதி உள்ளது. இச்சந்நிதிக்கு எதிர்பக்கம் உள்ள தூணில் முருகபெருமானின் கோயில் வளர்ச்சி பணிகளுக்காக 650 ஏக்கர் நிலத்தை வழங்கிய ஆற்காடு நவாப் திருவுருவ படம் வரையப்பட்டு உள்ளது. இடது புறத்தில் கருவறை மூலவரான முருகன் வள்ளி தெய்வயானை திருவுருவ சிலைகளுக்கு மட்டும் அணிவிக்கப்படுகிற வில்வமாலை இங்கு கட்டப்படுகிறது. கடைகளில் விற்கப்படுகிற மற்ற மாலைகள் இங்கு அணிவிக்கப்படவில்லை.
இதற்கு எதிர்பகுதியில் இத்திருக்கோயிலை உருவாக்கிய ஆதிகுரு சிதம்பரசுவாமி படம் அமைக்கப்பட்டு உள்ளது சுனை விநாயகரை வணங்கி வழிப்பட்டபின்பே கருவறை நோக்கி நடக்க ஆரம்பித்தால் நம்மை அறியாமல் கை கூப்பியபடி முருகா முருகா என அழைக்கத் தோன்றும். கருவறையில் உள்ள முருகர் மற்றும் தெய்வயானை ஆகியோர் பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு திருவுருவில் காட்சி அளித்து கொண்டிருக்கிறார். தானாக தோன்றிய முருகர் வள்ளி தெய்வயானை ஆகிய திருவுருவ சிலைகளுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் அபிஷேக அலங்காரம் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்கு பதிலாக புனுகு ஜவ்வாது போன்ற வாசனை திரவிய பொருட்களால் சாத்தப்படுகிறது. எதிர் திசையில் பலிபீடமும் யானை வாகனமும் அமைந்து உள்ளது. ஐராவதம் என அழைக்கப்படுகிற யானை வாகனத்தை தேவேந்திரன் தனது மகள் தெய்வ யானைக்காக சீதனமாக வழங்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடத்தக்கது. கிழக்கு திசையை நோக்கியுள்ள மூலவர் சந்நிதியில் அபிஷேக ஆராதனைகளுக்காக முருகன் தெய்வயானை மற்றும் வள்ளி சிலைகள் சிறிய உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மூலவர் சந்நிதிக்கு மிக அருகிலேயே ஸ்ரீசக்கர ஸ்தானம் என அழைக்கப்படுகிற ஸ்ரீ சக்கர சந்நிதி உள்ளது. இங்கு சிதம்பர சுவாமி தவம் செய்த இடமாகும், ஸ்ரீசக்கர சந்நிதியில் வழிபாடு செய்து விட்டு வந்தால் மனக்கவலை எல்லாம் மாயமாய் பறந்தோடும் வேண்டுவதை நிறைவேற்றி தரும் பீடம் இச்சந்நிதி அமைந்து உள்ளது.
கருவறையிலிருந்து வெளியே தெற்கு புறமாக உற்சவர் மண்டபம் உள்ளது. இங்கு தான் உற்சவர் சிலைகளுக்கு பக்தர்களால் செய்யப்படுகிற அபிஷேக ஆராதனைகள் சுவாமி திருவீதி உலா போன்றவை நடைபெறுகிறது. ராஜகோபுரத்தின் உட்புற பகுதியின் பின் புறத்தில் வன்னியநாதர் விசாலட்சி நாகதேவதைகள் போன்ற சந்நிதிகள் உள்ளது. இங்கு நவகிரங்களுக்கு தனியாக சந்நிதி இல்லை. அதே சமயம் சூரியன் சனி இரு கிரங்களுக்கு மட்டும் தனித் தனியாக சந்நிதிகள் உள்ளது.
திருவிழாக்களின் விவரங்கள்:
சித்திரை மாதத்தில் தமிழ்வருடபிறப்பு வசந்த உற்சவம். இந்த வசந்த உற்சவவிழாவின் போது திருகல்யாண வைபவம் நடைபெறும். வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம் ஆதிகுருமூர்த்தி சிதம்பரசுவாமி மகாகுருபூஜை ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தி பவித்திர உற்சவம் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா விஜயதசமி பரிவேட்டை உற்சவம் ஐப்பசி மாதத்தில் கந்தர்சஷ்டி விழா காத்திகை மாதத்தில் கார்த்திகை தீபவிழா மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் தை மாதத்தில் தைப்பூசம் மாசி மாதத்தில் பங்குனி உத்திர பெருவிழா போன்ற விழர்க்கள் மட்டுமின்றி மாதத்தில் வருகின்ற. மகா சிவராத்திரி 10 நாட்கள் நடைபெறுகின்ற பிரமோற்சவ விழா பங்குனி மாதத்தில் பிரதோஷம் சஷ்டி கிருத்திகை போன்ற நாட்களிலும் சிறப்பான நிகழ்ச்சிகளாக நடைபெறுகிறது.
திருக்கோவிலுக்கு முன்புறம் திருக்குளம் உள்ளது. அதன்நடுவில் நீராழிமண்டபம் அமைந்து உள்ளது. இக்குளத்தினுள் 8 கிணறுகள் உள்ளது. கோடை வறட்சி காலத்திலும் கூட இக்குளம் வற்றாத நிலை உள்ளது. தைப்பூசவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இக்குளத்தில் தான் நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இத்திருக்கோயில் இயங்கி வருகிறது. பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உணர்த்திய திருமுருகன் தான் கோயில் கொண்ட இத்திருப்போரூரில் அனைத்து சந்நிதிகளும் ஓம் என்ற வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக திகழ்வது வன்னிய மரம்.. இந்த தலவிருட்சமான வன்னியமரத்தில் குழந்தை வரம் வேண்டுகின்ற பெண்கள் முருக கடவுளை வேண்டிக் கொண்டு தொட்டில் கட்டி சென்றால் குழந்தை பிறக்க அருள்புரிவான். இத்தலம் பரிகார தலமாக விளங்குகிறது. தமிழ் மாதத்தின் சஷ்டி திதியன்று விரதம் இருந்து இங்கு வந்து வழிபட்டு சென்றால் அவர்களுக்கு முருகனே குழந்தையாக பிறப்பான் எனச் சொல்லப்படுகிறது. திருமணம் நடக்கவேண்டும் என எண்ணுகிற கன்னிப் பெண்களும் தலவிருட்சமான வன்னிய மரத்தில் மஞ்சள் கயிற்றால் முருகனை வேண்டிக் கொண்டு முடிச்சு போடவேண்டும். மஞ்சள் கயிற்றால் போட்ட முடிச்சுகளே மிக விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்று விடுகிறது.
இத்திருக்கோயில் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு நண்பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளும் புரணரமைக்கப்பட்டு மிக விரைவிலேயே மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யுத்தபுரி சமரபுரி போரியூர் செருவூர் சமரப்பதி சமதளப்பூர் போன்ற சிறப்பு பெயர்களால் திருப்போரூர் திருத்தலத்தை அழைக்கப்படுகிறது.
எனவே வாழ்வில் திருப்பங்களை வேண்டுவோரும் மங்கலகரமான வாழ்வை நாடுவோரும் செல்லுகின்ற திருத்தலமாக திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் திகழ்கிறது. இத்தகைய முருக கடவுள் இங்கு கந்தசாமி என்ற நாமத்தில் கோயில் கொண்டுள்ளார். வாழ்வில் ஒருமுறையேனும் எல்லாம் வல்ல கந்தக்கடவுளை தரிசித்து நாம் வளம் பல காண்போம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.