எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம், ஆக.10 - காஞ்சிபுரம் அருகே கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கல்லூரி தலைவர் ஜேப்பியாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மருமகனும், கல்லூரியின் இயக்குநருமான மரியவில்சன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் ஜேப்பியார் கல்வி நிலையங்களில் ஒன்றான ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற என்ஜீனியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கம் இடிந்து விழுந்ததில் வடமாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை தொடர்பாக காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் உள்ள ஜேப்பியார் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரியை பிரபல கல்வியாளர் ஜேப்பியார், அவரது மருமகன் மரியவில்சன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இக்கல்லூரி வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்க கட்டிடம் கட்டும் பணி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டுவது குறித்து குன்னம் உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெறவில்லை. உள்விளையாட்டு அரங்கம் கட்டுவது குறித்து உரிய முறையில் தேர்ச்சிப் பெற்ற கட்டிட அமைப்பு இன்ஜினியரிடம் வரைபடம் எதுவும் பெறப்படவில்லை. முன் அனுபவம் இல்லாத தங்களது கல்லூரியில் படித்த ஒரு சில இன்ஜினியர்களை பணிக்கு அமர்த்தியும், வடமாநிலங்களில் இருந்து வேலை தேடி தமிழகத்திற்கு வந்த கட்டுமான பணியில் அனுபவமில்லாத நபர்களை ஏஜென்ட்டுகள் மூலம் பணிக்கு அமர்த்தியும் கட்டுமான பணிகளை செய்து வந்துள்ளனர். மேலும் ஸ்திர தன்மைக்கு (பலம்) குறைவான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியதும், ஸ்திர தன்மைக்குத் தேவையான கால அவகாசம் கொடுக்காமல் தொடர்ந்து கட்டுமான பணியை விரைந்து முடிக்க முயன்றதாலும் இந்த சம்பவம் நடந்து பல உயிர் இழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும் விசாரணையில் வடமாநிலத்தவர்களை ஏஜென்டுகள் மூலம் குறைந்த கூலிக்கு பணிக்கு அமர்த்தியும், பணியாளர்களின் தினக்கூலியிலிருந்து கணிசமான தொகையை கமிஷனாக பெறப்படுவதும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 6.8.2012 அன்று மாலை சுமார் 3.30 மணி அளவில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. பிறகு சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் சரிந்து விழுந்து சின்னா பின்னமானது. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் கதறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்டனர். அப்போது அசாம் மாநிலம் காசியாலா பகுதியைச் சேர்ந்த தப்பா (25), மிந்து (30), ஒடிஷா மாநிலம் பந்தாலா பகுதியைச் சேர்ந்த முந்து (25), சங்கர் (25), பாகுலு (30), புகாலிபீடா பகுதியைச் சேர்ந்த பிஸ்வாம்பத்ரா (30) உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து பிணமாக கிடந்தனர். அவர்களுடைய பிணங்களை போலீசார் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் (20), சத்ருகான் (38), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரங்காய் (24), கஸ்பர் மகன் பைசால் (28), நரேன், வினோத் ஆகிய 6 பேரை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சாகர், சத்ருகான், ரங்காய் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பைசால், நரேன், வினோத் ஆகிய 3 பேர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கஸ்பர் மகன் பைசால் (28) என்பவர் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த மேலும் 2 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இத்துயர சம்பவத்திற்கு காரணமான ஜேப்பியார் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் இயக்குநரும், ஜேப்பியாரின் மருமகனுமான மரியவில்சன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கட்டுமான இன்ஜினியர்கள் நாகர்கோவிலைச் சேர்ந்த அருள் ஜெயஅப்ரோஸ் (28), ராஜ்குமார் (28), வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்த ஏஜென்ட் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சுதானந்தன் (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பிறகு இவர்கள் 4 பேரும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அப்துல்மாலிக் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கட்டிடம் கட்ட உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்து உரிய முன் அனுமதி பெறாமலும், அனுபவம் உள்ள தேர்ந்த என்ஜினியர்களை வைத்து கட்டிடம் கட்டாமலும், கட்டிடம் கட்டும் இடத்தின் மண் பரிசோதனையை செய்யாமலும், ஸ்திர தன்மையுள்ள கட்டுமான பொருட்களை பயன்படுத்தாதனாலும், கட்டுமான பணியின் ஒவ்வொரு நிலையிலும் போதுமான கால அவகாசம் அளிக்காததாலும், அவசர அவசரமாக இந்த பெரிய கட்டுமான பணியை அலட்சியமாக கல்லூரி நிர்வாகம் செய்ததனால்தான் இந்த பெரிய விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு போலீஸ் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கல்லூரியின் தலைவரும், பிரபல கல்வியாளருமான ஜேப்பியாரை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவிட்டார். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் துணை சூப்பிரண்டு ஆர்.கஜேந்திரகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மோகனவேல், சவுந்தரராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் மின்னல் வேகத்தில் ஜேப்பியாரை தீவிரமாக தேடி வந்தனர்.
ஜேப்பியாரின் வீடுகள், கல்வி நிலையங்கள், கிழக்கு கடற்கரைச் சாலை, விமான நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் சல்லடைபோட்டு ஜேப்பியாரை தேடினர். இதனிடையே சென்னை எழும்பூரில் உள்ள ராமச்சந்திரா நீரிழிவு மருத்துவமனையில் ஜேப்பியார் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். மருத்துவமனையை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஜேப்பியாரிடம் கல்லூரி உள்விளையாட்டு அரங்க கட்டிடம் இடிந்து வடமாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பலியான வழக்கில் உங்களை கைது செய்கிறோம் என்று போலீசார் கூறி அவரை திடீரென கைது செய்தனர்.
மேலும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட் அப்துல்மாலிக் ஜேப்பியார் சிகிச்சை பெற்று வந்த சென்னை மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு விசாரணை நடத்திய அவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜேப்பியாரை வருகிற 22-ந்தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ஜேப்பியார் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அழைத்து செல்லாமல் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட பிரபல கல்வியாளர் ஜேப்பியார் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 304 ற 2 (அசம்பாவிதம் அல்லது கொலையாகாத மரணம்), 308 (அதிக காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் அருகே கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அக்கல்லூரியின் தலைவரும், பிரபல கல்விக்குழுமங்களின் தலைவருமான ஜேப்பியார், அவரது மருமகனும், கல்லூரியின் இயக்குநருமான மரியவில்சன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.