முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் இப்தார் விருந்து

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் இப்தார் விருந்தில் அமைச்சர் முஹம்மது ஜான், அன்வர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இப்தார் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக்தாவூது தலைமை தாங்கினார். இப்தார் விருந்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முஹம்மதுஜான்,    அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அன்வர்ராஜா, பி.டி.அரசகுமார், டாக்டர்.சேதுராமன், இசக்கிமுத்து, வேட்டவலம் மணிகண்டன், பி.என்.பாளையம், ஜவஹர்அலி, கவிஞர் வீரைகறீம் பெர்ணான்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் முஹம்மதுஜான் பேசுகையில், முஸ்லிம் சமுதாய மக்களை சீர்குலைத்தவர் கருணாநிதி. முதல்வர் ஜெயலலிதா தான் அனைத்து இஸ்லாமிய மக்களையும் ஓரே மேடையில் ஏற்றி உள்ளார். சமுதாயம் ஒன்றுபட மேலும் மேம்படுத்தி உள்ளவர் முதல்வர். சமுதாய மக்களுக்கு பல நல திட்டங்களை அறிவித்து சிறுபான்மை மக்கள் முன்னேற வேண்டும், குறிப்பாக கல்வி பயில இன்று பல சிறப்பான நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்.

வக்ப் போர்டு வாரியத்தின் சொத்துக்களை மீட்டவர் முதல்வர் ஜெயலலிதா. வக்ப் பேர்ாடு உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியை அளித்து அவர்கள் வாழ்வில் உயர உதவினார். ஆனால் கருணாநிதி தமிழில் இனிப்பாக பேசி சமுதாய மக்களை ஏமாற்றி வருகிறார்.

இஸ்லாமிய மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறுகிறார்கள். இஸ்லாமிய மக்களுக்கு என்றுமே பாதுகாவலர் முதல்வர் ஜெயலலிதா தான்.  தமிழகம் தான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடாகும். இவ்வாறு அவர் பேசினார். 

அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அன்வர் ராஜா பேசுகையில், இஸ்லாமிய மக்களின் பாதுகாவலர் என்று கூறும் கருணாநிதியால் இன்று முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. இந்திய முஸ்லிம் லீக் கட்சி இன்று பல பரிவுகளாக உள்ளது. அதற்கு யார் காரணம் கருணாநிதி தான்.

முதல்வர் ஜெயலலிதா தான் கடந்த 2001-ல் முஸ்லிம் லீக் கட்சிகளை கூட்டணியில் ஒன்றாக இணைத்து போட்டியிட வைத்தவர். கருணாநிதியோ தனது சுய நலத்திற்கு முஸ்லிம் சமுதாய மக்களை பிரித்து அரசியல் லாபம் அடைந்தார்.

எம்.ஜி.ஆர்.,  காயிதேமில்லத் மகனுக்கு எம்.எல்.சி. பதவி வழங்கினார். அதனால் கருணாநிதி தூண்டுதலால் முஸ்லிம்லீக் கட்சி இரண்டாக உடைந்து தி.மு.க. கூட்டணியில்  போய்சேர்ந்தார்கள். முஸ்லிம் மக்களுக்கு பல நல திட்டங்களை அறிவித்தவர் முதல்வர் ஜெயலலிதா தான்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்