முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை வாங்கி தருவதாக மோசடி: தெலுங்கு நடிகர் கைது

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சென்னை மெக்கானிக்கிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக தெலுங்கு நடிகர் கைது செய்யப்பட்டார். சென்னை அயனாவரம் ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். மணிகண்டன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

வடபழனி, ராதாகிருஷ்ணன் குடியிருப்பில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த பவன்குமார் (25) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் ஜிங்கா என்ற தெலுங்கு சினிமாவில் கதாநாயனாக நடித்துள்ளார். மேலும் 3ஞ்2ஞ்7 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் என்னிடம், நான் படப்பிடிப்புக்காக அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளேன். அதனால் எனக்கு அங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களும் அதன் நிர்வாகிகளும் தெரியும். ரூ.5 லட்சம் கொடுத்தால் வெளிநாட்டு நிறுவனத்தில் உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். அவரது பேச்சை நம்பி ரூ.5 லட்சம் பணத்தை நான் அவரிடம் கொடுத்தேன். ஆனால் இதுவரை எனக்கு வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மணிகண்டன் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

அந்த புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் திரிபாதி, துணை கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ரவிந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி தெலுங்கு நடிகர் பவன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்