முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துமகாசமுத்திரத்தில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

ஜாகர்த்தா,ஏப்.- 5 - இந்துமகாசமுத்திரத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. அதனால் சுனாமி தாக்கலாம் என்று இந்தோனேஷியாவின் பூகம்ப ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ள்து.  இந்த பூகம்பாமானது ஜாவா தீவில் இருந்து தெற்கே ஏற்பட்டுள்ளது. ஜாவா தீவின் மத்திய பகுதியில் இருந்து சுமார் 293 கிலோ மீட்டர் தொலைவில் பூகம்பம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டியிருந்தது. பூகம்பத்தின் அளவு பெரிய அளவில் இருந்ததால் சுனாமி தாக்குதல் நடக்கலாம். அதனால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படி பூகம்ப ஆராய்ச்சி நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் சுனாமி பெரிய அளவில் இருக்காது. லேசாகத்தான் இருக்கும் இது ஜாவா பகுதி கடலோடு நின்றுவிடும் என்று பசிபிக் கடல் பிராந்திய பகுதியில் இருக்கும் அமெரிக்க சுனாமி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்