எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 14 - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு வினாத்தாள் அவுட்டான விவகாரத்தில் 3 ஆசிரியர்கள், தம்பதியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப்பின் தேர்வை ரத்து செய்வதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவித்துள்ளார்.
கூட்டுறவு அலுவலர், கூட்டுறவு தணிக்கை அலுவலர், சார்பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட 3687 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப் 2 தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. தமிழகம் முழுவதும் 114 மையங்களில் 6.40 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வை 4 லட்சத்துக்கும் அதிகமான பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்2 தேர்வில் வினாத்தாள் அவுட் ஆனதாக வந்த தகவலை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாக தேர்வு எழுதியவர்கள் புகார் கூறினார்கள்.தர்மபுரி மாவட்டத்தில் 43 மையங்களில் குரூப்2 எழுத்து தேர்வு நடந்தது. தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி முத்தானூரை சேர்ந்த சுரேஷ்குமார், கம்பைநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்தார். தேர்வு தொடங்குவதற்கு முன்பே அவர் பதற்றத்துடன் காணப்பட்டார். இதை தேர்வு கண்காணிப்பாளர் துணை தாசில்தார் கருப்பசாமி என்பவர் பார்த்தார். அவருக்கு அந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் ஏராளமான ஜெராக்ஸ் பேப்பர்கள் இருந்தது. மேலும் விடைத்தாளும் இருந்தது. இதனால் அந்த வாலிபர் மீது சந்தேகம் வலுத்தது. . குரூப்2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும், வாலிபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விடைத்தாளும் ஒரே மாதிரியாக இருந்தது. இதையடுத்து துணை தாசில்தார் கருப்பசாமி இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் தயாராக இருந்தனர். தேர்வு முடிந்து வந்ததும் போலீசார் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா ஈட்டியம்பட்டி அருகே உள்ள எம்.தாதம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் சுரேஷ்குமார் (35) என்பது தெரியவந்தது. சுரேஷ் குமார் ரூ. 3 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்த தகவலையொட்டி மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர்
அவரிடம் இந்த விடைத்தாள் எப்படி வந்தது என்று கேட்டனர். அதற்கு அவர் திருவண்ணாமலையில் நேற்று (முன்தினம்) இரவு ரூ. 50 ஆயிரம் கொடுத்து வாங்கினேன் என்றார். போலீசார் சுரேஷ் குமாரை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றனர். அங்கு தானிபாடி என்ற பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரை காட்டினார். போலீசார் விவேகானந் தனிடம் எப்படி உங்களுக்கு இந்த கேள்வித்தாள் கிடைத்தது என்று கேட்டனர். அதற்கு அவர் திருவண்ணாமலையை சேர்ந்த ரங்கராஜ், குமார் ஆகியோரிடம் வாங்கினேன் என்றார். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.
வினாத்தாள் நகல் விற்ற ரங்கராஜன் (40), விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருவது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். கைதான ரங்கராஜன், சுரேஷ்குமார் மற்றும் 2 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் தர்மபுரிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் விசாரணை நடத்தினார்,. அப்போது இவர்கள் பெரிய நெட்வொர்க் அமைத்து பல பேருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வினாத்தாள் கொடுத்து இருப்பது தெரியவந்தது. மேலும் வினாத்தாள் வெளியானது தொடர்பாக கம்பை நல்லூர் போலீசார் சுரேஷ்குமார், விவேகானந்தன், அருண், ரங்கராஜ், குமார், nullபேஷ், ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் ஈரோட்டில் குரூப்2 தேர்வு வினாத்தாளுடன் இருந்த ஒரு பெண்ணும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்த போது நாமக்கல் ராஜாஜி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் இருந்து தனக்கு கிடைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். பயிற்சி மைய நிர்வாகி ராசப்பன் என்பவரை அழைத்தும் விசாரித்தனர்.
ராஜாஜி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மைய நிர்வாகி ராசப்பன் கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணைய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி உள்ளார். மேலும் கடந்த ஆண்டு இறுதியில் டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த போது, தமிழகம் முழுவதும் 42 பயிற்சி மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாமக்கல் ராஜாஜி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையத்திலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குரூப் 2 தேர்வு ரத்து- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு: குரூப்2 தேர்வுக்கான வினாத்தாள் எப்படி வெளியே வந்தது? இதை வெளியிட்டது யார்? துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கட்ட விசாரணை முடிந்து தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் அறிக்கையினை டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு அனுப்பினர். இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாணைய செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகார்களையடுத்து தேர்வை ரத்து செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக்குப் பிறகு, குரூப்2 தேர்வை ரத்து செய்வதாக ஆர்.நட்ராஜ் அறிவித்தார். மேலும் இத்தேர்வை மீண்டும் எப்போது நடத்துவது என்பது குறித்து 10 நாளில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.