முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சுதந்திரதின கொண்டாட்டம் மதுரைநகர் முழுவதும் பலத்தபாதுகாப்பு

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஆக.- 15 - சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மதுரையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் போலீசார் சோதனை நடத்தினர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் 4நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிக்டெக்டர் மூலம் கடும் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதே போல் மதுரை ரயில் நிலையத்திலும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். மேலும் அவர்களின் உடமைகள் மெட்டல்டிக்டெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. ரயில்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 3நாட்கள் பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் முக்கிய இடங்களான பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், மக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மதுரை நகரில் மட்டும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான பொருட்களோ, மர்ம நபர்கள் குறித்த நடமாட்டம் இருந்தால் உடனே அருகில் இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்