முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சியில் சுதந்திரதின விழா மேயர் ராஜன்செல்லப்பா கொடியேற்றினார்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 16 - மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்தியா முழுவதும் நேற்று சுதந்திரதினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியில் நேற்று காலை 9.30மணிக்கு தேசிய கொடியை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அரசு தேர்வுகளில் சாதனை புரிந்த மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். மேலும் மாநகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.  இந்த விழாவில் ஆணையாளர் நந்தகோபால், துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், துணை ஆணையாளர் சாம்பவி, உதவி ஆணையாளர் தேவதாஸ், மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, மு.இராஜபாண்டியன், கே.ஜெயவேல், கே.ராஜபாண்டி உள்பட கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்