முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டமன்ற தேர்தலில் காங். வெற்றிபெறும் - அந்தோணி

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

கோழிக்கோடு, ஏப்.- 5 - கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றிபெறும் என்று மத்திய  பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி நம்பிக்கை தெரிவித்தார். கேரளாவில் வருகிற 13 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய ராணுவ மந்திரியுமான ஏ.கே.அந்தோணி கோழிக்கோட்டில்  நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று கூறினார். அதிக மெஜாரிட்டியுடன் தங்களது கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகாலமாக இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தவறான ஆட்சியால் மக்கள் வெறுப்படைந்து இருக்கிறார்கள் என்றும், எனவே காங்கிரஸ் கட்சிக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார். தலைவரை சந்தியுங்கள் என்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி,  ஏற்கனவே இடதுசாரி கூட்டணிக்கு எதிராக கேரளாவில் பலமான எதிர்ப்பலை வீசிக்கொண்டிருக்கிறது. அந்த காற்றை புயல்காற்றாக உருமாற்றம் செய்து இந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணியை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும் என்றும் அந்தோணி கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்