முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திரதினத்தை முன்னிட்டு பழனிகோவிலில் 5,000 பேருக்கு பொதுவிருந்து

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

பழனி, ஆக. - 16 - சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவமி திருக்கோவிலில் 5,000 பேர்களுக்கு பொதுவிருந்து நடைபெற்றது.முன்னதாக மங்கள இசையுடன், நடந்த சிறப்பு பூஜைகளில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், பழனி கோட்டாட்சியர் வேலுச்சாமி, நகர துணைத்தலைவர் முருகானந்தம், பழனி ஒன்றிய பெருந்தலைவர் ஏ.டி.செல்லச்சாமி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் கோவில் கும்பாபிஷேக நினைவரங்கில் அறுசுவை உணவு வழங்கும் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 5,000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்