முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிண்டியில் முதல்வர் பங்கேற்கும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.17 - முதல்​அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி கிண்டியில் இன்று   நடக்கிறது. ரம்ஜான் பெருநாளின் இறையாண்பை சிறப்பிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் ஆண்டு தோறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று   (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கிண்டி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் முதல்​ அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது நோன்பை திறந்து வைக்கிறார். சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா வரவேற்கிறார். முடிவில் அமைச்சர் முகம்மது ஜான் நன்றி கூறுகிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் முதல்​அமைச்சரை வரவேற்க அ.தி.மு.க.வினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்