எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.17 - கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து பேசி வரும் மத்திய அமைச்சருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உயர்நீதிமன்றங்களை மதிப்பதில்லை என்று நீதிபதிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.
மத்திய அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை விதிக்க கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறியாளர் சுந்தர்ராஜன் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் மேலும் 2 மனுக்களை நேற்று தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் ஜோதிமணி, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.
இது தவிர மத்திய அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமலேயே அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்புவதற்கு அந்த ஆணையம் அனுமதித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், மத்திய அரசு வக்கீல் என்ன விளக்கம் கூறவுள்ளார் என்று கேள்வி கேட்டனர். அந்த சமயத்தில் மத்திய அரசு தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஜோதிமணி, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நடந்து கொள்ளும் விதத்திற்கும், மாநில அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சகம் எல்லா தொழிற்சாலைகளுக்கும் பின்பற்றும் நடைமுறைகளை இதற்கும் பின்பற்றக் கூடாது. இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது. கதிர்வீச்சு சம்பந்தப்பட்ட பிரச்சினை இதில் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் மற்ற மாநில ஆணையத்திடம் அறிவுரைகளை கேட்டு முடிவு எடுக்கக் கூடாதா? அதை ஏன் பின்பற்றுவது கிடையாது? 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கொண்ட கனநீர் கடலில் கலந்தால் அங்குள்ள உயிரினங்கள் அழிந்து விடும். ஏன் இவ்வாறு சுற்றுச்சூழல் ஆணையம் செயல்படுகிறது.
இந்த வழக்கு கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பேட்டிகளையும், அறிக்கைகளையும் தொடர்ந்து கொடுத்து கொண்டு வருகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 25-ம் தேதியன்று எரிபொருள் நிரப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசை பொறுத்த வரையில் உச்சநீதிமன்றத்தைதான் மதிக்கிறது. உயர்நீதிமன்றங்களை மதிப்பது கிடையாது. பிறகு ஏன் உயர்நீதிமன்றத்திற்கு வர வேண்டும்.
இந்த சென்னை உயர்நீதிமன்றம் தனது 150 வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. பாரம்பரியமிக்க இந்த உயர்நீதிமன்றத்திற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட கிடையாதா?
கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அது தொடர்பான அறிவிப்பை எப்படி அறிவிக்கலாம்? உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மட்டும் தான் மத்திய அரசு மதிக்குமா? உயர்நீதிமன்றம் பற்றி பொதுமக்கள் மத்தியில் என்ன நினைப்பார்கள்?
இந்த வழக்கை விசாரித்த நாள் முதல் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகம் அறிவித்து வரும் ஒவ்வொரு அறிவிப்புகள் குறித்தும் எனக்கு தினந்தோறும் எஸ்.எம்.எஸ். மூலம் கருத்துக்கள் வருகிறது. இந்த வழக்கை விசாரிக்காமல் விட்டுவிட முடிவு செய்யலாமா என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது. இவ்வாறு நீதிபதி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
இதையடுத்து, இந்த மனு குறித்து வரும் செவ்வாய் கிழமைக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.