முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமபந்தி விருந்து: சபாநாயகர் கலந்து கொண்டார்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருவொற்றியூர், ஆக.17 - திருவொற்றியூர் திருவடிவுடையம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சுதந்திர தின சமபந்தி விருந்தில் சபாநாயகர் டி.ஜெயக்குமார், கே.குப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் அம்மனுக்கு செலுத்திய புடவைகளை பெண் பக்தர்களுக்கு வழங்கினார்கள். 

தமிழக அரசு உத்தரவின் பேரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை திருவடிவுடையம்மன் திருக்கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. திருக்கோயில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தமிழக சபாநாயகர் டி.ஜெயக்குமார், கே.குப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுடன் உணவருந்தினார்கள். அதன்பின் பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்கள். 

இவர்களுடன் மண்டலக்குழு தலைவர் எம்.தனரமேஷ், கவுன்சிலர்கள் ஆர்.வி.தன்ராஜ், எம்.சின்னா, எஸ்.நாகம்மாள், பேரரசி, அம்பிகைதாஸ், ரவிக்குமார், சம்பத்குமார், கிருஷ்ணன், செங்கை சேகர், கணேஷ், பிரகாஷ், டோக்யோ மணி,  டில்லிபாபு, முன்னாள் கவுன்சிலர்கள் சங்கர், பரமசிவம், கோதண்டபழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சபாநாயகர் டி.ஜெயக்குமார் திருக்கோயிலில் உள்ள ஆதிபுரீஸ்வர், வடிவுடையம்மனை வணங்கினார். முடிவில் பொதுமக்கள் அம்மனுக்கு செலுத்திய 100 புடவைகளை பெண் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினார். அப்போது கே.குப்பன் எம்.எல்.ஏ. உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்